சசிகலாவை சாதராண வார்டுக்கு மாற்ற மருத்துவர்கள் முடிவு!

Published by
பாலா கலியமூர்த்தி

சசிகலா உடல்நிலை சீராக உள்ளதால் ஐசியூ வார்டில் இருந்து சாதாரண வார்டுக்கு மாற்ற பெங்களூரு மருத்துவமனை மருத்துவர்கள் முடிவு.

கொரோனாவால் பாதிக்கப்பட்டு, பெங்களூர் மருத்துவமனையில் ஐசியூ வார்டில் சிகிச்சை பெற்று சசிகலாவின் உடல்நிலை குறித்து விக்டோரியா மருத்துவ கல்லூரி மருத்துவமனை அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில், சசிகலாவின் உடல்நிலை சீராக உள்ளது என்றும் சசிகலாவிற்கு கொடுக்கப்படும் ஆக்சிஜன் அளவு 3 லிட்டராக குறைக்கப்பட்டுள்ளது எனவும் தெரிவித்துள்ளது.

மேலும், சசிகலாவுக்கு கொரோனா தொற்று தொடர்ந்து குறைந்துள்ளது. சர்க்கரை அளவு அதிகரித்துள்ளதால் சசிகலாவுக்கு இன்சுலின் மருந்து செலுத்தப்படுகிறது. இதனால் தீவிர சிகிச்சை பிரிவில் இருக்கும் சசிகலாவை சாதாரண வார்டுக்கு மாற்ற மருத்துவமனையை நிர்வாகம் முடிவு செய்துள்ளது. மருத்துவமனை அறிக்கையிலும் ஐசியூவில் கண்காணிப்பு என்பது குறிப்பிடப்படவில்லை.

கொரோனா காரணமாக சசிகலாவின் உடல்நிலை பாதிக்கப்பட்டு 6வது நாளாக சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. சசிகலாவின் நாடித்துடிப்பு, ரத்த அழுத்தம் மற்றும் சுவாசிக்கும் திறன் சீராக உள்ளது என மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Published by
பாலா கலியமூர்த்தி

Recent Posts

ரெட்ரோவுக்கு குவியும் எதிர்மறையான விமர்சனங்கள்…முதல் முறையாக மனம் திறந்த கார்த்திக் சுப்புராஜ்!

சென்னை : இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடிகர் சூர்யா நடிப்பில் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த மே 1-ஆம் தேதி…

13 hours ago

பாகிஸ்தான் தாக்குதல் நடத்தினால் பதிலடி கொடுங்க…முழு உத்தரவு கொடுத்த பிரதமர் மோடி!

டெல்லி : கடந்த ஏப்ரல் 22 -ஆம் தேதி ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில், பாகிஸ்தான் ஆதரவு தீவிரவாத அமைப்பாக கூறப்படும்…

15 hours ago

வலிமையுடன் போரை கையாண்ட மோடிக்கு எனது பாராட்டுகள்- ரஜினிகாந்த் பேச்சு!

சென்னை : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருந்தது. அதனை…

15 hours ago

தீவிரவாதிகள் தான் டார்கெட்…பொதுமக்கள் இல்லைங்க! பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் விளக்கம்!

லக்னோ : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த நிலையில் அதற்கு பதிலடி கொடுக்கும்…

16 hours ago

ஆப்ரேஷன் சிந்தூர் இன்னும் முடியவில்லை…இந்திய விமானப் படை கொடுத்த விளக்கம்!

டெல்லி : காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போர் என்பது பெரும் பதற்றத்தை ஏற்படுத்திய நிலையில், நேற்று…

18 hours ago

போர் நிறுத்தியாச்சு வாங்க…சொந்த ஊர் திரும்பிய வீரர்களை மீண்டும் அழைக்கும் அணி நிர்வாகங்கள்?

டெல்லி : காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போர் என்பது பெரும் பதற்றத்தை ஏற்படுத்திய நிலையில், நேற்று…

19 hours ago