Dogs Dead: குப்பை கிடங்கில் இறந்து கிடந்த 30 தெருநாய்கள்.! பொதுமக்கள் அதிர்ச்சி..!

Dogs Dead

சென்னை மாடம்பாக்கத்தில் உள்ள குப்பைக் கிடங்கில் 30 தெருநாய்களின் சடலங்கள் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மாடம்பாக்கம் அருகே அப்பகுதி மக்கள் காலை நடைபயிற்சிக்கு சென்றுள்ளனர். அப்பொழுது குப்பைக் கிடங்கில்  தெரு நாய்களின் சடலங்களை கண்டுள்ளனர்.

இதன்பின் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டதையடுத்து போலீசார் சம்பவ இடத்திற்கு வந்தனர். பிறகு, நாய்களின் சடலங்கள் புதைக்கப்பட்டன. இது தொடர்பாக இதுவரை புகார் பதிவு செய்யவில்லை. மாநகராட்சி பொது சுகாதாரத்துறைக்கு தகவல் தெரிவிக்கப்படும் என போலீசார் தெரிவித்தனர்.

அப்பகுதியை சோதனை செய்த போது, குப்பை கிடங்கின் அருகே பால் கிண்ணம் இருந்துள்ளது. இதனால் நாய்களுக்கு விஷம் கலந்த பாலைக் கொடுத்திருக்கலாம் என சந்தேகம் எழுந்துள்ளது. மேலும், தெரு நாய் தொல்லை குறித்து அதிகாரிகள் மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனங்களுக்கு தகவல் தெரிவிக்குமாறு விலங்கு பிரியர்களும், பல அமைப்புகளும் [பொது மக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்