#BREAKING: சீர்காழியில் இரட்டை கொலை..! 4 மணி நேரத்தில் வட மாநில கொள்ளையர்கள் கைது ..!

பூம்புகார் அருகே தருமகுளத்தில் தன்ராஜ் என்பவர் நகை அடகு கடை வைத்துள்ளார். இவர் வட மாநிலத்தை சேர்ந்தவர் என்று கூறப்படுகிறது. தன்ராஜ் இவரது மனைவி ஆஷா (45). மகன் அகில் (24), மருமகள் பெயர் நிக்கில் ஆகியோர் சீர்காழி ரயில்வே ரோடு பகுதியில் வசித்து வருகின்றனர். இந்நிலையில், இன்று அதிகாலை தன்ராஜ் வீட்டில் காலை 6 மணி அளவில் வட மாநிலத்தை சார்ந்த 4 பேர் கதவை தட்டி ஹிந்தியில் பேசியுள்ளனர். நகை தொடர்பாக யாரோ வந்திருப்பதாக நினைத்து, கதவை திறந்துள்ளனர்.
வீட்டில் உள்ளே சென்ற 4 பேர் கொண்ட கும்பல் நுழைந்து வீட்டில் இருந்த 15 கிலோ தங்கம் நகையை கொள்ளையடித்து தன்ராஜ் மனைவி ஆஷா, அவரது மகன் அகில் (25) ஆகிய இருவரையும் கழுத்தறுத்து கொன்று விட்டு நகைகளுடன் தப்பினர்.
மேலும், அடகு கடை உரிமையாளர் தன்ராஜ் மற்றும் அவரது மருமகள் ஆகியோரை கொள்ளையர்கள் தாக்கியதில் பலத்த காயம் ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிக்சை பெற்று வருகின்றனர். இந்நிலையில், சீர்காழி போலீசார் வழக்குப் பதிவு செய்து சிசிடிவி கேமராவை எடுத்து தப்பி சென்ற வடமாநில கொள்ளை கும்பலை குறித்து போலீஸார் விசாரித்து வந்த நிலையில், கொலை அரங்கேற்றிய வட மாநிலத்தை சார்ந்த 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
லேட்டஸ்ட் செய்திகள்
”சதாம் உசேனுக்கு ஏற்பட்ட கதி தான், ஈரான் தலைவருக்கு ஏற்படும்” ஈரானுக்கு இஸ்ரேல் பகிரங்க எச்சரிக்கை.!
June 17, 2025
அதிமுக முன்னாள் அமைச்சர் சண்முகநாதனின் மகன் ராஜா கைது.!
June 17, 2025
”சாதிவாரி கணக்கெடுப்பு சமூகநீதியை நிலைநாட்ட வேண்டும்” – மத்திய அரசுக்கு விஜய் அறிக்கை.!
June 17, 2025