புரெவி புயல் எதிரொலி: நாளை 6 மாவட்டங்களுக்கு விடுமுறை!

Nellai, Tuticorin, Kanyakumari, Tenkasi, Virudhunagar and Ramanathapuram districts will be closed tomorrow due to the effects of Buravi storm.

புரெவி புயல் எதிரொலி காரணமாக நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி, தென்காசி, விருதுநகர், ராமநாதபுரம் ஆகிய 6 மாவட்டங்களுக்கு நாளை விடுமுறை.

வங்கக்கடலில் ஏற்பட்ட ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுமண்டலம் புயலாக வலுப்பெற்று, இலங்கை திரிகோணமலை பகுதியில் நேற்று இரவு கரையை கடந்தது. இதனையடுத்து இன்று இரவு அல்லது நாளை அதிகாலை பாம்பன் – குமரி இடையே கரையை கடக்கவுள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இந்த புரேவி புயல், தற்பொழுது பாம்பனுக்கு முக அருகில் நிலைக் கொண்டுள்ளதாகவும், இதனால் அடுத்த 3 மணிநேரத்தில் பாம்பனை கடந்து செல்லும். இதன்காரணமாக அப்பகுதியில் 90 கி.மீ. வேகத்தில் பலத்த காற்று வீசுமென வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. தற்பொழுது புயல் கரையை கடக்கவுள்ள நிலையில், நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி, தென்காசி, விருதுநகர், ராமநாதபுரம் ஆகிய 6 மாவட்டங்களுக்கு நாளை பொதுவிடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த 6 மாவட்டங்களில் அத்தியாவசிய பொருட்களை தவிர பிற பணிகளுக்கு வெளியே செல்வதை தவிர்க்குமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.