ELECTION BREAKING: ஆரணி 3 சுற்று முடிவுகள் வெளியானது

இந்தியாவில் 7 -கட்டமாக மக்களவை தேர்தல் நடைபெற்றுள்ளது.கடந்த ஏப்ரல் 11-ம் தேதி தொடங்கி மே 19-ம் தேதி வரை 7 கட்டங்களாக தேர்தல் நடைபெற்றது. இந்தியா முழுவதும்

இந்தியாவில் 7 -கட்டமாக மக்களவை தேர்தல் நடைபெற்றுள்ளது.கடந்த ஏப்ரல் 11-ம் தேதி தொடங்கி மே 19-ம் தேதி வரை 7 கட்டங்களாக தேர்தல் நடைபெற்றது. இந்தியா முழுவதும்  542 தொகுதிகளுக்கு தேர்தல் நடைபெற்றது .இன்று வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது.இதற்காக நாடு முழுவதும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில் தபால் வாக்கு எண்ணிக்கையில்  தமிழகத்தில் நடைபெற்று வருகிறது.இந்நிலையில் திமுக தமிழகத்தில் அதிகமான  இடங்களில் முன்னிலை பெற்று வந்த நிலையில் மின்னணு வாக்கு எந்திரங்களில் பதிவான வாக்குகள் தற்போது எண்ணப்பட்டு வருகின்றது .

இந்நிலையில் ஆரணி தொகுதியில் சுற்று முடிவுகள் வெளியாகியுள்ளது.அதன் படி  3 சுற்று முடிவில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட விஷ்ணு பிரசாத் 83,135  வாக்குகள் பெற்று முன்னிலை பெற்றுள்ளார்.அதிமுக சார்பில் போட்டியிட்ட வி.ஏழுமலை 57,292 வாக்குகள் பெற்று உள்ளார். அமமுக சார்பில் போட்டியிட்ட செந்தமிழன் 4,064 வாக்குகள் பெற்று உள்ளார். நாதக சார்பில் போட்டியிட்ட தமிழரசி  3,009 வாக்குகள் பெற்று உள்ளார். மநீம சார்பில் போட்டியிட்ட ஷாஜி  978 வாக்குகள் பெற்று உள்ளார்.

மேலும் ஆரணியில் மூன்று சுற்று முடிவில் காங்கிரஸ் தொடர்ந்து முன்னிலையில் இருந்து வருகிறது.