தேர்தல் பார்வையாளர் செல்போன் எண் வெளியீடு – மாவட்ட ஆட்சி தலைவர்!

Namakkal Collector has released the mobile number of the election observer in case of any complaints related to urban local elections.

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் தொடர்பான புகார்கள் ஏதேனுமிருப்பின் தேர்தல் பார்வையாளரின் அலைபேசி எண்ணை வெளியிட்ட நாமக்கல் ஆட்சியர்.

தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி பிப்ரவரி 19-ஆம் தேதி ஒரேகட்டமாக நடைபெற உள்ளது. உள்ளாட்சி தேர்தலுக்கான பணியில் மாநில தேர்தல் ஆணையம் தீவிரம்காட்டி வருகிறது. இந்த நிலையில், தேர்தல் பார்வையாளர் செல்போன் எண்னை நாமக்கல் மாவட்ட ஆட்சியர் வெளியிட்டுள்ளார். இதுதொடர்பான அறிவிப்பில், நாமக்கல் மாவட்ட சாதாரண நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலுக்கான தேர்தல் பார்வையாளராக ஜெ.இன்னசென்ட் திவ்யா., இ.ஆ.ப., மேலாண்மை இயக்குநர், தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகம், சென்னை அவர்கள் தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையத்தால் நியமிக்கப்பட்டுள்ளார்.

எனவே, நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் தொடர்பான புகார்கள் ஏதேனுமிருப்பின் தேர்தல் பார்வையாளரின் அலைபேசி எண்-89033 48421 ல் தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம் என நாமக்கல் மாவட்ட ஆட்சித் தலைவரால் தெரிவிக்கப்படுகிறது. மேலும், அரசியல் கட்சியினர் மற்றும் வேட்பாளர்கள் தேர்தல் பார்வையாளர் அவர்களை நாள்தோறும் காலை 10.30 மணி முதல் 11.30 மணி வரை விருந்தினர் மாளிகையில் அறை எண்.1-ல் நேரில் சந்திக்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

unknown node