அதிமுக எம்எல்ஏ தோப்பு வெங்கடாசலம் அடிப்படை உறுப்பினர் பதிவியிலிருந்து நீக்கப்படுவதாக அதிமுக தலைமை அறிவிப்பு.
அதிமுக எம்எல்ஏ தோப்பு வெங்கடாசலம் வரும் தேர்தலில் தனக்கு போட்டியிட வாய்ப்பு கொடுக்காததால் பெருந்துறை தொகுதியில் சுயேச்சையாக போட்டியிட முடிவு செய்து, நேற்று வேட்புமனு தாக்கல் செய்திருந்திருந்தார். கடந்த 2011, 2016ல் சட்டமன்றத் தேர்தல்களில் வெற்றி பெற்றவர். தற்போது மீண்டும் தனக்கு வாய்ப்பு வழங்காமல் பெருந்துறை தொகுதி வேட்பாளராக ஜெயக்குமார் என்பவரை அறிவித்ததால் சுயேட்சையாக போட்டியிட வேட்புமனு தாக்கம் செய்திருந்தார்.
இந்நிலையில், கொள்கை, குறிக்கோளுக்கு முரணான வகையில் செயல்பட்டதாலும், அதிமுகவிற்கு களங்கமும், அவப்பெயரும் உண்டாக்கும் விதத்தில் பெருந்துறை தொகுதியில் அதிமுகவை எதிர்த்து சுயேட்சையாக போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்த அதிமுக எம்எல்ஏ தோப்பு வெங்கடாசலம் கட்சியில் இருந்து அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பதவியிலிருந்தும் நீக்கப்படுகிறார் என்று முதல்வர், துணை முதல்வர் அறிக்கை வெளியிட்டுள்ளனர்.
இதுபோன்று, மீண்டும் போட்டியிட வாய்ப்பு வழங்காததால், சேந்தமங்கலம் அதிமுக சிட்டிங் எம்எல்ஏ சந்திரசேகரன் சுயேட்சையாக போட்டியிட நேற்று வேட்புமனு தாக்கல் செய்திருந்தார். இதையடுத்து, கழகத்தின் கட்டுப்பாட்டை மீறி கழகத்திற்கு களங்கமும், அவப்பெயரும் உண்டாக்கும் விதத்தில் ஈடுபட்டதால் கட்சியில் அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்து நீக்கப்படுவதாக அறிவித்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னை : செங்கல்பட்டு மாவட்டம் திருவிடந்தை இடத்தில் கடந்த மே 12-ஆம் தேதி பாமகவின் பிரமாண்ட மாநாடு "சித்திரை முழு…
மணிப்பூர் :சந்தேல் மாவட்டத்தில் பாதுகாப்புப் படையினர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில், ஆயுத கும்பலைச் சேர்ந்த 10 பேர் கொல்லப்பட்டனர். அவர்களிடம் இருந்து…
சென்னை : கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.…
டெல்லி : ஐபிஎல் தொடரில் புதிய வீரர்களை இணைக்க பிசிசிஐ அனுமதி வழங்கியுள்ளது. ஐபிஎல் தொடர் ஒரு வாரம் ஒத்திவைக்கப்பட்டதால்…
டெல்லி : மத்தியப் பிரதேச அமைச்சர் குன்வர் விஜய் ஷாவின் சகோதரி கர்னல் சோபியா குரேஷிக்கு எதிராக பயங்கரவாதிகளின் கருத்தை…
சென்னை : வக்ஃப் மசோதா வழக்கில் நீதிமன்றத்தின் இடைக்கால நடவடிக்கையில் தவெக முக்கிய பங்காற்றியது என்றும், சிறுபான்மையினர் உரிமைகளை காக்கும்…