தமிழகத்தில் தான் அமைதியாக தேர்தல் நடக்கிறது – சத்யபிரதா சாகு

Chief Electoral Officer of Tamil Nadu Sathyaprabha Sagu has said that the election is being held peacefully in Tamil Nadu.

தமிழகத்தில் தான் அமைதியாக தேர்தல் நடக்கிறது என்று தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் இன்னும் ஒரு சில மாதங்களில் சட்டசபை பொதுத்தேர்தல் வரவுள்ளதால், தேர்தல் முன்னேற்பாடு பணிகளில் தமிழக தேர்தல் ஆணையம் தீவிரமாக ஈடுபட்டுள்ளது. இந்நிலையில், இன்று கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு உள்ளிட்ட அதிகாரிகள் தேர்தல் முன்னேற்பாடுகள் குறித்த ஆலோசனை மேற்கொண்டனர்.

இதன்பிறகு செய்தியாளர்களிடம் பேசிய தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு, பிற மாநிலங்களை காட்டிலும் தமிழகத்தில்தான் அமைதியான முறையில் தேர்தல் நடக்கிறது என்று தெரிவித்துள்ளார்.