இபிஎஸ் உடன் ஓபிஎஸ் சேர்ந்தாலும் நாங்கள் சேர மாட்டோம்.! டி.டி.வி.தினகரன் பரபரப்பு அறிவிப்பு.! 

Published by
மணிகண்டன்

அமமுக தலைவர் டிடிவி தினகரன் இன்று மதுரையில் நடைபெற்ற அமமுக கட்சி நிகழ்வுகளில் கலந்துகொன்டார். அதன் பிறகு செய்தியாளர்களிடம் ஆளுநர் ஆர்.என்.ரவி கூறிய கருத்து, தமிழக அரசியல் நிலவரம், ஒ.பன்னீர் செல்வம், எடப்பாடி பழனிச்சாமி, காவிரி விவகாரம் உள்ளிட்ட பல்வேறு கேள்விகளுக்கு பதில் கூறினார்.

தமிழகத்தில் ஒரு பட்டியலின பெண் ஊராட்சி மன்ற தலைவராக முடியவில்லை என்றால் எங்கே இருக்கிறது உங்கள் சமூக நீதி என தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி அண்மையில் விமர்சித்து இருந்தார். இதுகுறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதில் கூறிய அமமுக தலைவர் தினகரன்,  தமிழகத்தில் எல்லோரும் சமமானவர்கள் என்று நிலை தான்உள்ளது. பெரியார், அண்ணா, எம்ஜிஆர், ஜெயலலிதா போன்ற தலைவர்களால் சமூக நீதி நிலைநாட்டப்பட்டுள்ளது. கடந்த 50 ஆண்டுகளாக தமிழகத்தில் தீண்டாமை என்பது இல்லை. ஜாதி பாகுபாடு இல்லை. தமிழ்நாடு மற்ற மாநிலங்களுக்கு முன்னுதாரணமாக திகழ்கிறது. இதில் தனிநபர் செய்யும் செயல்களுக்கு ஆளுநர் மொத்த மாநிலத்தையும் குறை கூறுவது தவறானது என கூறினார்.

பாஜக உடன் அமமுக கூட்டணியில் சேருமா என்ற கேள்விக்கு, தற்போது அரசியல் கூட்டணி யூகங்களுக்கு பதில் சொல்ல முடியாது. சரியான நேரத்தில் சரியான முடிவு எடுக்கப்படும். தமிழகத்தில் எப்போதுமே ஜாதி மத அடிப்படையில் வாக்களிக்க மாட்டார்கள். அனைத்து சமுதாயத்தினரும் சேர்ந்து தான் வாக்களிப்பார்கள். கூட்டணி குறித்து தேர்தல் நேரத்தில் அறிவிப்போம் என்று டிடிவி.தினகரன் கூறினார்.

ஓபிஎஸ் உடன் எவ்வாறு மீண்டும் சேர்ந்தீர்கள் என்று கேட்டதற்கு, ஓ.பன்னீர்செல்வம் எனது பழைய நண்பர். அவரது முடிவுகள் பாதிப்பை ஏற்படுத்தினாலும், அவர் எனது நண்பர் என்பதால் மீண்டும் ஒன்றிணைந்து செயல்பட ஆரம்பித்தோம். மற்றபடி ஓ.பன்னீர்செல்வம், அவரது கட்சி சார்பாக தனித்து செயல்படுகிறார். நாங்களும் தனித்து செயல்படுகிறோம். நாங்கள் ஒன்றிணைந்து ஆலோசனை செய்வோம். மற்றபடி எங்களது செயல்பாடுகள் தனித்தனியே என டிடிவி.தினகரன் குறிப்பிட்டார்.

எடப்பாடி பழனிச்சாமி உடன் அமமுக இணைந்து செயல்படுமா என்ற கேள்விக்கு, அமமுக தொண்டர்கள், 90 சதவீத நிர்வாகிகள் எடப்பாடி பழனிச்சாமியிடம் சேர்ந்து பணியாற்றுவதற்கு விருப்பம் தெரிவிக்கவில்லை. ஒருவேளை ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிச்சாமி உடன் சேர்ந்து பணியாற்ற விரும்பினாலும், நாங்கள் சேர மாட்டோம். ஒரு நண்பராக ஓ.பன்னீர்செல்வம் அவர்களின் குணம் எனக்கு தெரியும். ஆனால் எடப்பாடி பழனிச்சாமியின் சுபாவம் என்னவென்றே எனக்கு தெரியாது. இதற்கு காலம் தான் பதில் சொல்ல வேண்டும்.

காவிரி விவகாரம் குறித்து டிடிவி தினகரன் பேசுகையில், கர்நாடகா எப்போதுமே வன்முறை பாதையை தான் கையாண்டு வருகிறது. ஆனால் தமிழகம் தங்களது உரிமைக்காக நீதிமன்றம் தான் எப்போதும் செல்லும். காவிரி மேலாண்மை வாரியம், காவிரி ஒழுங்காற்று வாரியம், உச்சநீதிமன்றம் கூறிய பிறகும் கர்நாடகா அரசு செயல்பாடு ஜனநாயகத்திற்கு நல்லதல்ல என்றும் இன்றைய செய்தியாளர்கள் சந்திப்பில் டி.டி.வி.தினகரன் தெரிவித்தார்.

Published by
மணிகண்டன்
Tags: #ADMK#AMMK

Recent Posts

மீண்டும் டிரோன்களை ஏவி தாக்க பாகிஸ்தான் முயற்சி… முறியடித்த இந்திய ராணுவம்!

காஷ்மீர் : தொடர்ந்து 3-வது நாளாக இந்தியா மீது டிரோன் தாக்குதலை பாகிஸ்தான் நடத்தி வருகிறது. நேற்றிரவு நூற்றுக்கணக்கில் டிரோன்களை…

9 hours ago

”மகன்களைக் கைவிட்ட ரவி மோகன்.., வீட்டை விட்டு வெளியேற்றுகிறார்” – கொந்தளித்த ஆர்த்தி.!

சென்னை : மனைவி ஆர்த்தியுடன் விவாகரத்தை அறிவித்த நடிகர் ரவி மோகன், பாடகி கெனிஷாவுடன் ஒன்றாக நிகழ்ச்சியில் பங்கேற்று வருவது…

9 hours ago

”பயணிகள் விமானத்தை கேடயமாக பயன்படுத்தி பாக். ராணுவம் பெரும் இழப்புகளை சந்தித்தது” – வியோமிகா சிங்.!

டெல்லி :  ‘ஆபரேஷன் சிந்தூர்’ தொடர்பான செய்தியாளர் சந்திப்பு இன்று மாலை டெல்லியில் நடைபெற்றது. அப்பொழுது, நேற்றிரவு நடந்த தாக்குதல்…

10 hours ago

” பள்ளி மீது தாக்குதல்.., 2 மாணவர்கள் உயிரிழப்பு” – வெளியுறவுத்துறை செயலாளர் விக்ரம் மிஸ்ரி.!

டெல்லி : 'ஆபரேஷன் சிந்தூர்’ தொடர்பான செய்தியாளர் சந்திப்பு இன்று மாலை டெல்லியில் நடைபெற்றது. அப்பொழுது, நேற்றிரவு நடந்த தாக்குதல்…

11 hours ago

300- 400 ட்ரோன்களை.., எல்லையில் நேற்று இரவு நடந்தது என்ன..? புட்டு..புட்டு.. வைத்த சோஃபியா குரேஷி.!

டெல்லி : ஆபரேஷன் சிந்தூர் தொடங்கி 3 நாள்களாகிவிட்டது. நேற்றிரவு பதற்றம் அதிகரித்த நிலையில், அவ்வப்போது நிலவரங்களை அரசும், ராணுவமும் தெரிவித்து…

12 hours ago

போர் பதற்றம் : மேகாலயாவில் 2 மாதம் இரவு நேர ஊரடங்கு உத்தரவு .!

மேகாலயா : வட மேற்கு எல்லையில் பதற்றமான சூழல் காரணமாக, வங்கதேச எல்லையில் உள்ள மேகாலயா மாநிலத்தில் 2 மாதங்களுக்கு…

12 hours ago