மாவட்டம் விட்டு மாவட்டம் பயணம் செய்பவர்களுக்கு கட்டாய கொரோனா பரிசோதனை மற்றும் தனிமைப்படுத்தல் இல்லை என்று சுகாதார துறை தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் செப்டம்பர் 30ம் தேதி வரை தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு நீட்டிப்பை தமிழக அரசு அறிவித்திருந்தது. அதன்படி இன்று முதல் இபாஸ் முறை ரத்து, பேருந்து சேவைக்கு அனுமதி, வழிப்பாட்டு தலங்கள் திறக்க அனுமதி உள்ளிட்ட கட்டுபாட்டுகளுடன் கூடிய பல தளர்வுகளை தமிழக அரசு அறிவித்திருந்தது . அந்த வகையில் மாவட்டங்களுக்கு இடையே பயணம் செய்பவர்களில் கொரோனாவுக்கான அறிகுறிகள் இருந்தால் மட்டுமே பரிசோதனை செய்யப்படும் என்று சுகாதார துறை தெரிவித்துள்ளது.
மேலும் வெளிநாடுகளில் இருந்து தமிழகம் வருபவர்கள் நோய் தொற்று இல்லை என்ற சான்று, அதாவது 96 மணி நேரத்திற்குள் மேற்கொள்ளப்பட்ட கொரோனாவுக்கான பரிசோதனையில் கொரோனா இல்லை என்ற சான்றிதழ் இருக்க வேண்டும் என்றும், அவர்கள் வீட்டிற்கு அனுப்பப்படுவார்கள் என்றும், அவர்கள் வீட்டில் 14 நாட்கள் தனிமைப்படுத்த வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளனர். மேலும் அந்த சான்றிதழ் இல்லாதவர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது. மேலும் தமிழகத்திற்கு வந்து விட்டு அடுத்த 72 மணி நேரத்தில் சொந்த ஊருக்கு திரும்பும் நபர்களுக்கு கொரோனா பரிசோதனை இல்லை என்றும் சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.
ஹைதராபாத் : சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகளுக்கு இடையிலான போட்டி ராஜீவ் காந்தி சர்வதேச மைதானத்தில் நடைபெற்று…
சென்னை : 42ஆவது வணிகர் தினத்தையொட்டி, இன்று சென்னை மதுராந்தகத்தில், தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் சார்பில் நடைபெற்ற வணிகர்…
சென்னை : நகைச்சுவை மன்னன் நடிகர் கவுண்டமணியின் மனைவி சாந்தி (67) காலமானார். காதல் திருமணம் செய்து கொண்ட கவுண்டமணி…
ஹைதராபாத் : ஐபிஎல் 2025 இன் 55 வது போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகளுக்கு இடையிலான…
சென்னை : குரூப் 2, 2ஏ பிரதான தேர்வு முடிவுகளை டிஎன்பிஎஸ்சி வெளியிட்டுள்ளது. இதுகுறித்து அறிவிப்பு ஒன்றையும் டிஎன்பிஎஸ்சி வெளியிட்டுள்ளது.…
சென்னை : தமிழகத்தில் சட்டத்துக்குப் புறம்பாக தங்கியுள்ள பாகிஸ்தான் பங்களாதேஷை சேர்ந்தவர்களை வெளியேற்ற தமிழக அரசை வலியுறுத்தியும் பயங்கரவாத தாக்குதலை…