சேலத்தில் உள்ள சமூக செயற்பாட்டாளர் பியூஸ் மனுஷ். இவர் ஏரிகளை சீரமைப்பது போன்ற பொது பணிகளை செய்து வரும் போது ஃபேஸ்புக்கில் லைவ் வீடியோ மூலம் பேசுவார். மத்திய அரசின் 8 வழிச்சாலை , ஹைட்ரோகார்பன் , உள்ளிட்ட திட்டங்களை எதிர்ப்பு தெரிவித்து கருத்துகளை பதிவிடுவார்.
இந்நிலையில் இன்று சேலத்தில் உள்ள பாஜக அலுவலகத்திற்கு சென்று அங்கிருந்த அவரிடம் சில கேள்விகளை எழுப்பினார். அப்போது பியூஸ் மனுஷ் ஃபேஸ்புக் லைவ் வீடியோ போட்டு இருந்தார். அப்போது இருதரப்பினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. ஒரு கட்டத்தில் பாஜக அலுவலகத்தில் இருந்தவர்கள் பியூஸ் மனுஷ் அலுவலகத்தை விட்டு போகுமாறு கூறினார்.
பின்னர் ஏற்பட்ட தள்ளுமுள்ளுவில் பியூஸ் மனுஷ் செல்போன் கீழே விழுந்தது இதனால் ஃபேஸ்புக் லைவ் நின்றது. இதற்கிடையில் பியூஸ் மனுஷ் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. பின்னர் அங்கு வந்து காவல்துறை பியூஸ் மனுஷ் மீட்டு அழைத்து சென்றனர்.
காவல்துறையினர் அழைத்து செல்லும் போது போலீஸ் முன்பாக பியூஸ் மனுஷ் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது. இதுகுறித்து பாஜகவினர் கூறுகையில் , தனது சுய விளம்பரத்திற்காக பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் செயலை செய்ததாக குற்றம் சாட்டினர்.
காஷ்மீர் : பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும்…
டெல்லி : இந்தியாவின் எல்லையோர குடியிருப்பு பகுதிகளை குறிவைத்து பாகிஸ்தான் தாக்குதலை தொடுத்துள்ளது. இதனை இந்திய ராணுவம் பெரும்பாலும் முறியடித்தாலும்,…
டெல்லி : பயங்கரவாத முகாம்கள் மீது தாக்குதல் நடத்தி அதனை தரைமட்டமாக்கிய காட்சிகளை இந்திய ராணுவம் வெளியிட்டது. ஜம்மு -…
டெல்லி : இந்திய கிரிக்கெட் உலகின் மிக முக்கிய அடையாளமாக விளங்குபவர் விராட் கோலி. ரசிகர்களால் 'கிங்' கோலி என…
டெல்லி : எல்லையில் பாகிஸ்தான் அத்துமீறி தாக்குதல் நடத்தியது பற்றியும் ஆபரேஷன் சிந்தூர் தற்போதைய நிலை குறித்தும் டெல்யில் இன்று…
சண்டிகர் : காஷ்மீர் பஹல்காமில் பயங்கரவாதிகள் தாக்குதல், அதற்கு பதிலடியாக பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாதிகள் முகாம்கள் மீது ஆபரேஷன் சிந்தூர்…