உதவி ஆய்வாளரை காலில் சுட்ட பிரபல ரவுடி சிடி மணி!

Published by
Rebekal

தனிப்படை போலீசாரால் நள்ளிரவில் சுற்றி வளைத்து கைது செய்யப்பட்ட பிரபல ரவுடி சிடி மணி தனிப்படை உதவி ஆய்வாளரை காலில் சுட்டுள்ளார்.

சென்னை தேனாம்பேட்டையை சேர்ந்த பிரபல ரவுடி தான் சிடி மணி. இவர் மீது  ஏற்கனவே கொலை, கொள்ளை, ஆள்கடத்தல், வழிப்பறி உள்ளிட்ட 30-க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ள நிலையில், சில வழக்குகளுக்காக இவர் குண்டர் சட்டத்தின் கீழ் சிறை தண்டனையும் பெற்றுள்ளார். இந்நிலையில் புழல் சிறையில் இருந்து அண்மையில் ஜாமினில் வெளிவந்த சிடி மணி தலைமறைவாகி விட்டதாக போலீசார் தனிப்படை அமைத்து தேடி வந்துள்ளனர்.

இதனையடுத்து சென்னை அடுத்த நாவலூரில் பதுங்கியிருந்த சிடி மணியை இன்று நள்ளிரவு போலீசார் கைது செய்து ரகசிய இடத்தில் வைத்து விசாரணை நடத்தி வந்த வருகின்றனர். அப்பொழுது சிடி மணியை பிடிக்க சென்ற தனிப்படை உதவி ஆய்வாளர் பாலகிருஷ்ணனை சிடி மணி காலில் சுட்டுள்ளார். இதில் படுகாயமடைந்த உதவி ஆய்வாளர் சென்னை ராஜிவ் காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். மேலும், இந்த சம்பவத்தின் போது சிடி மணியும் காயமடைந்துள்ளதாக கூறப்படுகிறது, தற்பொழுது இது குறித்து சிடி மணியிடம் தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

Published by
Rebekal

Recent Posts

”முடிவுக்கு வந்தது போர் ”.., பெரிய அறிவிப்பை வெளியிட்ட இந்தியா – பாகிஸ்தான்.!

”முடிவுக்கு வந்தது போர் ”.., பெரிய அறிவிப்பை வெளியிட்ட இந்தியா – பாகிஸ்தான்.!

டெல்லி : இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போரை நிறுத்திக் கொள்ள இரு நாடுகளும் சம்மதம் தெரிவித்திருப்பதாக அமெரிக்க அதிபர்…

14 hours ago

”இந்திய – பாகிஸ்தான் போர் நிறுத்தத்திற்கு ஒப்புதல்” – அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அறிவிப்பு.!

வாஷிங்டன் : இந்தியா - பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போரை நிறுத்திக் கொள்ள இரு நாடுகளும் சம்மதம் தெரிவித்திருப்பதாக அமெரிக்க…

15 hours ago

”பாகிஸ்தான் பயங்கரவாததிகள் மீண்டும் தாக்குதல் நடத்தினால் இனி போராக கருதப்படும்” – மத்திய அரசு அறிவிப்பு.!

டெல்லி : இந்தியா - பாகிஸ்தான் இடையே பதற்றம் நிலவி வரும் நிலையில், பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், தேசிய…

15 hours ago

”கான்சர்ட் தொகையையும், ஒரு மாத சம்பளத்தையும் தேசிய பாதுகாப்பு நிதிக்கு தருகிறேன்” – இளையராஜா.!

சென்னை : இந்தியா - பாகிஸ்தான் இடையே நடந்து வரும் மோதலால் இருநாட்டின் எல்லைப் பகுதிகளிலும் பதற்றமான சூழல் நிலவுகிறது.…

16 hours ago

பாக். தாக்குதல்.. உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ரூ.10 லட்சம் – உமர் அப்துல்லா அறிவிப்பு.!

காஷ்மீர் : கடந்த மாதம் பஹல்காமில் நடந்த பயங்கரவாதத் தாக்குதலுக்கு பதிலடியாக, மே 7 ஆம் தேதி எல்லையைத் தாண்டி…

17 hours ago

பாகிஸ்தான் தாக்குதல்., காஷ்மீரில் 22 பேர் உயிரிழப்பு? வெளியான அதிர்ச்சி தகவல்!

காஷ்மீர் : பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும்…

18 hours ago