தனிப்படை போலீசாரால் நள்ளிரவில் சுற்றி வளைத்து கைது செய்யப்பட்ட பிரபல ரவுடி சிடி மணி தனிப்படை உதவி ஆய்வாளரை காலில் சுட்டுள்ளார்.
சென்னை தேனாம்பேட்டையை சேர்ந்த பிரபல ரவுடி தான் சிடி மணி. இவர் மீது ஏற்கனவே கொலை, கொள்ளை, ஆள்கடத்தல், வழிப்பறி உள்ளிட்ட 30-க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ள நிலையில், சில வழக்குகளுக்காக இவர் குண்டர் சட்டத்தின் கீழ் சிறை தண்டனையும் பெற்றுள்ளார். இந்நிலையில் புழல் சிறையில் இருந்து அண்மையில் ஜாமினில் வெளிவந்த சிடி மணி தலைமறைவாகி விட்டதாக போலீசார் தனிப்படை அமைத்து தேடி வந்துள்ளனர்.
இதனையடுத்து சென்னை அடுத்த நாவலூரில் பதுங்கியிருந்த சிடி மணியை இன்று நள்ளிரவு போலீசார் கைது செய்து ரகசிய இடத்தில் வைத்து விசாரணை நடத்தி வந்த வருகின்றனர். அப்பொழுது சிடி மணியை பிடிக்க சென்ற தனிப்படை உதவி ஆய்வாளர் பாலகிருஷ்ணனை சிடி மணி காலில் சுட்டுள்ளார். இதில் படுகாயமடைந்த உதவி ஆய்வாளர் சென்னை ராஜிவ் காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். மேலும், இந்த சம்பவத்தின் போது சிடி மணியும் காயமடைந்துள்ளதாக கூறப்படுகிறது, தற்பொழுது இது குறித்து சிடி மணியிடம் தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
சென்னை : நடிகர் விஜய் சேதுபதியின் மகன் சூர்யா விஜய் சேதுபதி, ‘பீனிக்ஸ்’ திரைப்படத்தில் ஹீரோவாக அறிமுகமாகிறார். ஏற்கனவே, இந்த…
டெல்லி : 2024 டி20 உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் இந்திய அணி சிறப்பாக விளையாடி கோப்பையை வென்றது இன்னும் ஒரு மறக்க முடியாத…
கடலூர் : மாவட்டம் சிதம்பரத்தில் அதிர்ச்சியடைய வைக்கும் வகையில் சம்பவம் ஒன்று நடந்துள்ளது. மடப்புரம் பகுதியில் தன்னுடைய குடும்பத்துடன் அர்ஜுனன் என்ற…
மத்தியப் பிரதேசம் : மாநிலத்தின் முதல்வர் கான்வாயில் இருந்த வாகனங்கள், ஜூன் 26, 2025 அன்று ரத்லம் மாவட்டத்தில் நடுவழியில்…
சென்னை : கோக்கைன் போதைப்பொருள் பயன்படுத்தியதாக நடிகர் ஸ்ரீகாந்த் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், வழக்கின் விசாரணை மேலும் தீவிரமடைந்து அடுத்தகட்டமாக இந்த…
ஈரான் : இஸ்ரேல் மற்றும் ஈரான் இரண்டு நாட்டிற்கும் இடையே எழுந்த போரின் காரணமாக பெரும் பதற்றம் ஏற்பட்டிருந்தது. அந்த பதற்றத்தை…