என்எல்சி 2-ஆவது சுரங்கத்தில் தீ விபத்து!

கடலூர் மாவட்டம் நெய்வேலியில் என்எல்சி 2-ஆவது சுரங்கத்தில் உள்ள இயந்திரத்தில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது. கன்வேயர் பெல்டில் ஏற்பட்ட தீ விபத்தால் இயந்திரம்

NLC Fire accident

கடலூர் மாவட்டம் நெய்வேலியில் என்எல்சி 2-ஆவது சுரங்கத்தில் உள்ள இயந்திரத்தில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது. கன்வேயர் பெல்டில் ஏற்பட்ட தீ விபத்தால் இயந்திரம் எரிந்து வருவதாக முதற்கட்ட தகவல் வெளியாகியுள்ளது. மேல்மண் நீக்கும் ராட்சத இயந்திரம் தீப்பிடித்து விபத்துக்குள்ளானது. பல கோடி ரூபாய் மதிப்பிலான இயந்திரம் தீப்பிடித்து எரிவதால் பரபரப்பான சூழல் நிலவி வருகிறது. எனவே, தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.