தமிழகத்தில் இன்று முதல் மருத்துவ கல்லூரிகளில் நேரடி வகுப்பு தொடங்கிய நிலையில், அரசின் வழிகாட்டை பின்பற்றி மாணவர்கள் வருகை.
தமிழகத்தில் அமலில் உள்ள ஊரடங்கில் தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளதால், தமிழகத்தில் இன்று முதல் மருத்துவ கல்லூரிகளில் நேரடி வகுப்புகள் தொடங்கி இருக்கிறது. இரண்டாம் ஆண்டு முதல் நான்காம் ஆண்டு வரையிலான மருத்துவ கல்லூரி மாணவர்கள் இன்று முதல் கல்லூரிக்கு வர தொடங்கினர்.
அரசின் வழிகாட்டு நெறிமுறைகளின்படி கல்லூரிகள் செயல்பட தொடங்கியது. கல்லூரிக்கு வரும் மாணவர்கள் அனைவரும் 48 மணி நேரத்திற்கு முன்பாக எடுக்கப்பட்ட கொரோனா பரிசோதனை சான்று மற்றும் தடுப்பூசி போட்டுக் கொண்டதற்கான சான்றுகளை வைத்திருப்பது கட்டாயம் என கூறப்பட்டது.
மேலும், தனிமனித இடைவெளி, முகக்கவசம் அணிவதை கடைபிடிக்க வேண்டும் என்பதை உறுதி செய்ய கல்லூரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்த நிலையில், கல்லூரிகள் திறக்கப்பட்டதை தொடர்ந்து மருத்துவ மாணவர்கள் ஆர்வத்துடன், வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி கல்லூரிக்கு வருகை தந்தனர்.
பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி இன்று சின்னசாமி மைதானத்தில்…
பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி தற்போது சின்னசாமி மைதானத்தில்…
டெல்லி : காஷ்மீர் பஹல்காம் தாக்குதலை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் இடையே ஒரு போர் பதற்றம் நிலவி வருகிறது.…
கொழும்பு : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதலை உள்ளூர் பயங்கரவாத…
இஸ்லாமாபாத் : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் ஏப்ரல் 22-ல் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இச்சம்பவத்தை அடுத்து…
சென்னை : தென்னிந்திய பகுதிகளின் மேல், வளிமண்டல கீழடுக்கு பகுதிகளில், கிழக்கு மற்றும் மேற்கு திசை காற்று சந்திக்கும் பகுதி…