சென்னை சுங்குவார்சத்திரத்தில் உள்ள ஃபாக்ஸ்கான் ஆலையின் நிர்வாகிகள் மாற்ற உயர் அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர் என தகவல் வெளியாகி உள்ளது.
ஸ்ரீபெரும்புதூரில் உள்ள ஃபாக்ஸ்கான் செல்போன் உதிரிபாக ஆலையில் வேலை செய்யும் ஊழியர்கள் தங்க வைக்கப்பட்டிருந்த இடம் உரிய தரத்துடன் இல்லாதது அம்பலமானது அடுத்து இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது என ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் தகவல் வெளியிட்டிருக்கிறது. அண்மையில் ஃபாக்ஸ்கான் ஊழியர்கள் தங்கி இருந்த இடத்தில் உணவு தரம் இல்லாததால் பல நூறு ஊழியர்கள் பாதிக்கப்பட்டனர். ஊழியர்கள் பாதிக்கப்பட்டதை அடுத்து ஆயிரக்கணக்கானபெண் தொழிலாளர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
ஊழியர்கள் தங்க வைக்கப்பட்டிருந்த கல்லூரி கட்டிடத்தில் சுகாதார வசதி இல்லை என்பதும் போராட்டத்தில் அம்பலமானது. ஊழியர்கள் பணிக்கு வராததால் ஐபோன் உதிரி பாகங்கள் தயாரித்து வரும் ஃபாக்ஸ்கான் ஆலையில் பணிகள் முடங்கின. ஃபாக்ஸ்கான் ஊழியர்கள் தங்கியிருந்த இடத்தை ஆய்வு செய்வதற்கு அதிகாரிகளை அனுப்பி உள்ளதாக ஆப்பிள் நிறுவனத் தகவல்கள் வெளியாகிஉள்ளது .
ஆப்பிள் நிறுவனம் விதித்துள்ள தரத்திற்கு ஏற்ப ஊழியர்கள் தங்குமிடத்தில் வசதி இல்லை என ஆய்வில் தகவல்.
குப்வாரா : ஜம்மு-காஷ்மீரின் குப்வாரா மாவட்டத்தில் உள்ள கட்டுப்பாட்டுக் கோட்டுக்கு அருகே இன்று, இராணுவ வாகனம் பள்ளத்தாக்கில் உருண்டு விழுந்ததில்…
மும்பை : ஐபிஎல் 2025 இன் 56-வது போட்டி இன்று மும்பை இந்தியன்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகளுக்கு இடையே…
சென்னை : இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கிய 'கூலி' என்கிற அதிரடி திரில்லர் திரைப்படம் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில்…
கர்நாடகா : நீண்டகாலமாக நிலுவையில் உள்ள ஒபுலாபுரம் சட்டவிரோத சுரங்க வழக்கில் கர்நாடக முன்னாள் அமைச்சர் மற்றும் 3 பேரை குற்றவாளிகள்…
சென்னை : தமிழ்நாடு அரசு ஊழியர்களுக்கான பண்டிகை கால முன்பணம் ரூ.10,000-லிருந்து ரூ.20,000-ஆக உயர்த்தி சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தநிலையில்,…
சென்னை : நகர்புறங்களில் பெரும்பாலும் கேன் குடிநீர் பயன்பாட்டில் உள்ளது. தமிழகத்தில் குடிநீர் கேன் உற்பத்தி மற்றும் விற்பனை செய்யும்…