பாஜக மாநில நிர்வாகி மீது குண்டர் சட்டம் பாய்ந்தது!

GOONDAS ACT

அம்பத்தூரை சேர்ந்த பாஜக நெசவாளர் அணி மாநில செயலாளர் மிண்ட் ரவி மீது குண்டாஸ் சட்டம்.

சென்னை அம்பத்தூரை சேர்ந்த பாஜக நெசவாளர் அணி மாநில செயலாளர் மிண்ட் ரவி குண்டாஸ் சட்டம் பாய்ந்தது. கட்டப்பஞ்சாயத்து மற்றும் ரவுடிசத்தில் ஈடுபட்டதாக கூறப்படும் சென்னை அம்பத்தூரை சேர்ந்த பாஜக நெசவாளர் அணி மாநில செயலாளர் மிண்ட் ரவி மீது குண்டாஸ் சட்டம் பாய்ந்தது.

கொரட்டூரில் நிலம் விற்பனை செய்த உரிமையாளரிடம் இருந்து ரூ.1.2 கோடி பணத்தை பறித்து கொலை மிரட்டல் கொடுத்த புகாரில் மிண்ட் ரவி மற்றும் ரமேஷ் என்பரும் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் உள்ளனர். இதில், பாஜக நெசவாளர் அணி மாநில செயலாளர் மிண்ட் ரவி மீது குண்டாஸ் சட்டம் போடப்பட்டுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்