நற்செய்தி.! 13,170 பேர் கொரோனாவிலிருந்து தப்பித்து வீடு திரும்பினர்.!

Default Image

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 413 பேர் கொரோனா தொற்றிலிருந்து மீண்டு வீடு திரும்பினர். மொத்தமாக 13,170 பேர் வீடுதிரும்பியதாக சுகாதார துறை அமைச்சகம்  தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் என்றும் இல்லாத அளவிற்கு இன்று 1,162 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதை அடுத்து, கொரோனா பாதித்தோரின் எண்ணிக்கை 23,495  ஆக அதிகரித்துள்ளது. இன்று கொரோனாவுக்கு 11  பேர் உயிரிழந்த நிலையில், மொத்தமாக கொரோனா தோற்றால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 184  ஆக உயர்ந்துள்ளது.

இந்நிலையில், தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 413 பேர் கொரோனா தொற்றிலிருந்து மீண்டு வீடு திரும்பினார்கள் மொத்தமாக 13,170 பேர் கொரோனா தொற்றிலிருந்து மீண்டு வீடு திரும்பியதாக தமிழக சுகாதார துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. மேலும் 10,138 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவது குறிப்பிடத்தக்கது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்