தூத்துக்குடி மக்களை சமாதானப் படுத்தவே ஸ்டெர்லைட் ஆலையை அரசு மூடியுள்ளது!- ஸ்டெர்லைட் தரப்பு வாதம்

Published by
Sulai

தூத்துக்குடியில் நடந்த துப்பாக்கி சூட்டில் 13 உயிர்கள் உயிரிழந்ததால் கொதித்தெழுந்த மக்களை சமாதானம் செய்யவே ஸ்டெர்லைட் ஆலையை அரசு மூடியுள்ளது என்றும் ஆலையை நிரந்தரமாக மூடுவதற்கு அரசு கொள்கை முடிவு எடுத்துள்ளதற்கு எந்த வித ஆதாரமும் இல்லை என்று ஸ்டெர்லைட் நிர்வாகம்  தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஸ்டெர்லைட் ஆலையை தமிழக அரசு மூடியுள்ள நிலையில் அது தொடர்பான வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. இன்று நடைபெற்ற விசாரணையில் இன்று ஆஜரான தமிழக அரசு வழக்கறிஞர் தூத்துக்குடியில் இருக்கும் தொழிற்சாலைகளில் அதிகம் மாசுகளை வெளியிடுவது ஸ்டெர்லைட் தொழிற்சாலை என்று கூறியுள்ளார். மேலும் ஸ்டெர்லைட் வந்த பின்னர் தான் அங்கு மாசுபாடு அதிகரித்துள்ளதாக தமிழக அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், தங்கள் ஆலையால் தூத்துக்குடியில் எவ்வித மாசும் இல்லை என்று சென்னை உயர் நீதி மன்றத்தில் ஸ்டெர்லைட் நிர்வாகம் சார்பில் விளக்கமனு ஓன்று தாக்கல் செய்யப்பட்டிருந்தது. மேலும் ஸ்டெர்லைட் ஆலையால் எந்த மாசுபாடும் இல்லை என்று என்.ஐ.ஆர்.ஐ (NIRI ) அமைப்பு கடந்த 2011ம் ஆண்டு தெரிவித்துள்ளது. மேலும் ஆலை மூடிய பின் காற்று மாசு குறைந்ததற்கு எந்த வித ஆதாரமும் இல்லை என்றும் கூறியுள்ளனர். கடந்த 10 ஆண்டுகளில் தூத்துக்குடி மக்களின் நலனுக்காக ஸ்டெர்லைட் நிர்வாகம் 10 ஆண்டுகளில் 500 கோடி வரை செலவளித்துள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Published by
Sulai

Recent Posts

பையன் ஹீரோ ஆகிட்டான் ரொம்ப பயமா இருக்கு! விஜய் சேதுபதி பேச்சு!

பையன் ஹீரோ ஆகிட்டான் ரொம்ப பயமா இருக்கு! விஜய் சேதுபதி பேச்சு!

சென்னை : நடிகர் விஜய் சேதுபதியின் மகன் சூர்யா விஜய் சேதுபதி, ‘பீனிக்ஸ்’ திரைப்படத்தில் ஹீரோவாக அறிமுகமாகிறார். ஏற்கனவே, இந்த…

8 hours ago

ஹர்திக் மட்டும் இல்லனா கோப்பை வந்திருக்காது! கேப்டன் ரோஹித் சர்மா ஓபன் டாக்!

டெல்லி : 2024 டி20 உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் இந்திய அணி சிறப்பாக விளையாடி கோப்பையை வென்றது இன்னும் ஒரு மறக்க முடியாத…

9 hours ago

சிதம்பரம் அருகே கொடூரம்…காதல் விவகாரத்தில் மகளையே கொன்ற தந்தை!

கடலூர் : மாவட்டம் சிதம்பரத்தில் அதிர்ச்சியடைய வைக்கும் வகையில் சம்பவம் ஒன்று நடந்துள்ளது. மடப்புரம் பகுதியில் தன்னுடைய குடும்பத்துடன் அர்ஜுனன் என்ற…

9 hours ago

தண்ணீர் கலந்த டீசல்…நடுவழியில் நின்ற ம.பி. முதல்வர் கான்வாய் வாகனங்கள்!

மத்தியப் பிரதேசம் : மாநிலத்தின் முதல்வர் கான்வாயில் இருந்த வாகனங்கள், ஜூன் 26, 2025 அன்று ரத்லம் மாவட்டத்தில் நடுவழியில்…

10 hours ago

யாருடனும் தொடர்பு இல்லை ப்ளீஸ் கொடுங்க..ஜாமீன் கேட்கும் நடிகர் கிருஷ்ணா!

சென்னை : கோக்கைன் போதைப்பொருள் பயன்படுத்தியதாக நடிகர் ஸ்ரீகாந்த் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், வழக்கின் விசாரணை மேலும் தீவிரமடைந்து அடுத்தகட்டமாக இந்த…

10 hours ago

இஸ்ரேல் போட்ட ஸ்கெட்சில் இருந்து ஈரான் தலைவர் காமெனி தப்பியது எப்படி? வெளியான சீக்ரெட்!

ஈரான் : இஸ்ரேல் மற்றும் ஈரான் இரண்டு நாட்டிற்கும் இடையே எழுந்த போரின் காரணமாக பெரும் பதற்றம் ஏற்பட்டிருந்தது. அந்த பதற்றத்தை…

11 hours ago