தூத்துக்குடியில் நடந்த துப்பாக்கி சூட்டில் 13 உயிர்கள் உயிரிழந்ததால் கொதித்தெழுந்த மக்களை சமாதானம் செய்யவே ஸ்டெர்லைட் ஆலையை அரசு மூடியுள்ளது என்றும் ஆலையை நிரந்தரமாக மூடுவதற்கு அரசு கொள்கை முடிவு எடுத்துள்ளதற்கு எந்த வித ஆதாரமும் இல்லை என்று ஸ்டெர்லைட் நிர்வாகம் தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஸ்டெர்லைட் ஆலையை தமிழக அரசு மூடியுள்ள நிலையில் அது தொடர்பான வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. இன்று நடைபெற்ற விசாரணையில் இன்று ஆஜரான தமிழக அரசு வழக்கறிஞர் தூத்துக்குடியில் இருக்கும் தொழிற்சாலைகளில் அதிகம் மாசுகளை வெளியிடுவது ஸ்டெர்லைட் தொழிற்சாலை என்று கூறியுள்ளார். மேலும் ஸ்டெர்லைட் வந்த பின்னர் தான் அங்கு மாசுபாடு அதிகரித்துள்ளதாக தமிழக அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், தங்கள் ஆலையால் தூத்துக்குடியில் எவ்வித மாசும் இல்லை என்று சென்னை உயர் நீதி மன்றத்தில் ஸ்டெர்லைட் நிர்வாகம் சார்பில் விளக்கமனு ஓன்று தாக்கல் செய்யப்பட்டிருந்தது. மேலும் ஸ்டெர்லைட் ஆலையால் எந்த மாசுபாடும் இல்லை என்று என்.ஐ.ஆர்.ஐ (NIRI ) அமைப்பு கடந்த 2011ம் ஆண்டு தெரிவித்துள்ளது. மேலும் ஆலை மூடிய பின் காற்று மாசு குறைந்ததற்கு எந்த வித ஆதாரமும் இல்லை என்றும் கூறியுள்ளனர். கடந்த 10 ஆண்டுகளில் தூத்துக்குடி மக்களின் நலனுக்காக ஸ்டெர்லைட் நிர்வாகம் 10 ஆண்டுகளில் 500 கோடி வரை செலவளித்துள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை : நடிகர் விஜய் சேதுபதியின் மகன் சூர்யா விஜய் சேதுபதி, ‘பீனிக்ஸ்’ திரைப்படத்தில் ஹீரோவாக அறிமுகமாகிறார். ஏற்கனவே, இந்த…
டெல்லி : 2024 டி20 உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் இந்திய அணி சிறப்பாக விளையாடி கோப்பையை வென்றது இன்னும் ஒரு மறக்க முடியாத…
கடலூர் : மாவட்டம் சிதம்பரத்தில் அதிர்ச்சியடைய வைக்கும் வகையில் சம்பவம் ஒன்று நடந்துள்ளது. மடப்புரம் பகுதியில் தன்னுடைய குடும்பத்துடன் அர்ஜுனன் என்ற…
மத்தியப் பிரதேசம் : மாநிலத்தின் முதல்வர் கான்வாயில் இருந்த வாகனங்கள், ஜூன் 26, 2025 அன்று ரத்லம் மாவட்டத்தில் நடுவழியில்…
சென்னை : கோக்கைன் போதைப்பொருள் பயன்படுத்தியதாக நடிகர் ஸ்ரீகாந்த் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், வழக்கின் விசாரணை மேலும் தீவிரமடைந்து அடுத்தகட்டமாக இந்த…
ஈரான் : இஸ்ரேல் மற்றும் ஈரான் இரண்டு நாட்டிற்கும் இடையே எழுந்த போரின் காரணமாக பெரும் பதற்றம் ஏற்பட்டிருந்தது. அந்த பதற்றத்தை…