2 பல்கலைக்கழகத்திற்கு புதிய துணைவேந்தர்களை நியமித்து ஆளுநர் உத்தரவு..!

தஞ்சை தமிழ்ப் பல்கழைக்கழகம், தமிழ்நாடு உடற்கல்வி மற்றும் விளையாட்டு பல்கலைக்கழகத்திற்கு புதிய துணைவேந்தர்களை நியமித்து ஆளுநர் ஆர்.என்.ரவி உத்தரவிட்டுள்ளார்.

தஞ்சை தமிழ்ப் பல்கழைக்கழகம், தமிழ்நாடு உடற்கல்வி மற்றும் விளையாட்டு பல்கலைக்கழகத்திற்கு புதிய துணைவேந்தர்களை நியமித்து ஆளுநர் ஆர்.என்.ரவி உத்தரவிட்டுள்ளார்.

அதன்படி, தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழக துணைவேந்தராக வி.திருவள்ளுவன் நியமனம் செய்யப்பட்டுள்ளார். இவர் அடுத்த 3 ஆண்டுகளுக்கு தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக திருவள்ளுவன் இருப்பார். சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக மொழியியல் உயராய்வு மையத்தின் பேராசிரியரான இவர் 28 வருடங்கள் அனுபவம் வாய்ந்தவர்.

அதேபோல தமிழ்நாடு உடற்கல்வி & விளையாட்டு பல்கலைக்கழக துணைவேந்தராக எம்.சுந்தர் நியமனம் செய்யப்பட்டுள்ளார். இவரும் அடுத்த 3 ஆண்டுகளுக்கு தமிழ்நாடு உடற்கல்வி & விளையாட்டு பல்கலைக்கழக துணைவேந்தராக எம்.சுந்தர் இருப்பார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அழகப்பா உடற்கல்வி பல்கலைக்கழகத்தின் முதல்வரான எம்.சுந்தர், 26 வருடங்கள் அனுபவம் வாய்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.