தமிழ்நாட்டில் திமுக அரசு பொறுப்பேற்று ஓராண்டு நிறைவடைந்ததை முன்னிட்டு ஆளுநர் ஆர்.என்.ரவி வாழ்த்து.
தமிழகத்தில் கடந்த ஆண்டு நடந்து முடிந்த சட்டமன்ற பொதுத்தேர்தலில் தேர்தலில் திமுக கூட்டணி மாபெரும் வெற்றி பெற்று ஆட்சியை அமைத்தது. அதன்படி, 2021 மே மாதம் 7-ம் தேதி ஆளுநர் மாளிகையில், ‘முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் எனும் நான்’ என்றவாறு முதலமைச்சராக திமுக தலைவர் முக ஸ்டாலின் பொறுப்பேற்றார். அப்போது, ஸ்டாலினுடன் 33 அமைச்சர்களும் பொறுப்பேற்றனர். ராஜகண்ணப்பன், உள்ளிட்டச் சிலரின் இலாக்காக்கள் மட்டும் மாற்றப்பட்ட நிலையில், இந்த ஓராண்டில் எந்த ஒரு அமைச்சரும் நீக்கப்படவில்லை.
திமுக ஆட்சி அமைந்து ஓராண்டு நிறைவடைந்ததை அடுத்து அண்ணா, கருணாநிதி நினைவிடங்களில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் மரியாதை செலுத்தினார். ஓராண்டு நிறைவு தினத்தை திமுக நிர்வாகிகள், தொண்டர்கள் கொண்டாடி வருகின்றனர். கூட்டணி கட்சிகள் தலைவர்கள் உள்ளிட்ட பலரும் வாழ்த்துக்களும், பாராட்டுகளும் தெரிவித்து வருகின்றனர். அந்தவகையில், தற்போது ஓராண்டு நிறைவிற்கு தமிழக ஆளுநர் வாழ்த்து தெரிவித்துள்ளார். ஆட்சியின் முதலாம் ஆண்டு நிறைவைக் கொண்டாடும் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் அனைத்து அமைச்சர்களுக்கும் தனது அன்பான வாழ்த்துகள் என கூறியுள்ளார்.
மும்பை : நடப்பாண்டு ஐபிஎல் தொடரில் எந்தெந்த அணிகள் பிளே ஆப் சுற்றுக்கு செல்லப்போகிறது எந்த அணி கோப்பையை வெல்ல போகிறது…
டெல்லி : பிரீமியர் லீக் (ஐபிஎல்) 2025 இல் விளையாடிய இளம் வீரர், 14 வயது பேட்ஸ்மேன் வைபவ் சூர்யவன்ஷி…
சென்னை : தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் ஐந்து நாட்கள் பயணமாக உதகைக்குச் சென்றுள்ள நிலையில், நேற்று முதல் நாளாக நடைப்பயிற்சி மேற்கொண்டு…
சென்னை : தமிழ்நாட்டில் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகளோடு 11-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகளையும் அமைச்சர் அன்பில் மகேஸ் வெளியிட்டுள்ளார்.ஆனால்,…
சென்னை : தமிழகத்தில் 2024-2025 கல்வியாண்டிற்கான 10ம் வகுப்பு (SSLC) பொதுத்தேர்வு முடிவுகள் மே 16 (இன்று) காலை 9:00 மணிக்கு…
சென்னை : தமிழகத்தில் 10ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் கடந்த மார்ச் 28-ஆம் தேதி முதல் ஏப்ரல் 15 வரை நடைபெற்றன. இந்தத்…