தடையை மீறி நடத்தப்பட்ட காஞ்சிபுர வேல் யாத்திரையில் இன்று கைது செய்யப்பட்ட எச்.ராஜா!

தடையை மீறி நடத்தப்பட்ட காஞ்சிபுர வேல் யாத்திரையில் இன்று எச்.ராஜா மற்றும் அவருடன் இருந்தவர்களை போலீசார் கைது செய்துள்ளனர்.
பா.ஜா.க சார்பில் தமிழகத்தில் நடத்தப்படவியருந்த வேல் யாத்திரைக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. இருப்பினும், சில இடங்களில் பாஜகவினர் அத்து மீறி வேல் யாத்திரை நடத்தி வருகின்றனர். தடையை மீறி நடத்தப்படக்கூடிய இந்த வேல் யாத்திரையில் கலந்துகொள்பவர்களை தடுக்க போலீசாரும் தயார் நிலையில் இருக்கின்றனர்.
இந்நிலையில் எச்.ராஜா அவர்கள் தலைமையில் இன்று காஞ்சிபுரத்தில் வேல் யாத்திரை நடத்தப்பட்டுள்ளது. அங்கு அவர் உரையாற்றியுள்ளார். உடனடியாக அங்கு வந்த காவல்துறையினர் எச்.ராஜா மற்றும் அவருடன் இருந்த தொண்டர்களை கைது செய்துள்ளதாக எச்.ராஜா அவர்களே தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இதோ அந்த பதிவு,
இன்று காஞ்சிபுரத்தில் வெற்றிவேல் யாத்திரையில் உரையாற்றிய பிறகு காவல்துறை அனைவரையும் கைது செய்துள்ளது. pic.twitter.com/iJ0IZC0vjk
— H Raja (@HRajaBJP) November 9, 2020
லேட்டஸ்ட் செய்திகள்
இஸ்ரேலில் குடியிருப்புகளில் குண்டு மழை பொழியும் ஈரான்.! கிளஸ்டர் குண்டுகள் என்ன செய்யும்.?
June 20, 2025
தனுஷின் ‘குபேரா’ எப்படி இருக்கு.? நெட்டிசன்கள் என்ன சொல்கிறார்கள்.! இதோ டிவிட்டர் விமர்சனம்.!
June 20, 2025
”பட்டாசு விபத்தில் பலியானவர்களுக்கு ரூ.10 லட்சம் வழங்க வேண்டும்” – மதுரை கிளை உத்தரவு.!
June 20, 2025