#JUSTIN: செங்கல்பட்டில் எல்.முருகன் கைது!

தமிழகத்தில் தடையை மீறி 3-வது நாளாக செங்கல்பட்டில் வேல் யாத்திரை நடத்தியதாக பாஜக மாநில தலைவர் எல்.முருகன் உட்பட பாஜக நிர்வாகிகள் பலரை போலீசார் கைது செய்தனர்.
திருத்தணி முதல் திருச்செந்தூர் வரை நவம்பர் 8 ஆம் தேதி முதல் டிசம்பர் 6 ஆம் தேதி வரை பாஜக சார்பில் வேல் யாத்திரை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், வேல் யாத்திரை நடத்த தமிழக அரசு யாத்திரைக்கு தமிழக அரசு அனுமதி மறுத்த நிலையில், பாஜக சார்பில் தடையை மீறி திட்டமிட்டபடி வேல் யாத்திரை இன்று 3வது நாளாக நடத்தினர்.
அதன்படி, முதல் நாளாக கடந்த 6 ஆம் தேதி தடையை மீறி வேல் யாத்திரை நடத்தியதற்கு தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் உட்பட நிர்வாகிகள் பலரை திருத்தணியில் போலீசார் கைது செய்யப்பட்டு, பின்னர் விடுவிக்கப்பட்டனர்.அந்த வகையில், நேற்று இரண்டாம் நாளாக கோயம்பேட்டில் இருந்து திருவொற்றியூர் வரை வேல் யாத்திரை நடைபெற்றது. ஆனால், பாஜக தலைவர் எல்.முருகன், இல.கணேசன் உள்ளிட்ட பாஜக நிர்வாகிகள் திருவொற்றியூரில் கைது செய்யப்பட்டு பின்னர் விடிவிக்கப்பட்டனர்.இந்நிலையில், இன்று செங்கல்பட்டில் தடையை மீறி வேல் யாத்திரைக்கு புறப்பட்ட பாஜக மாநில தலைவர் எல்.முருகன் 3-வது முறையாக கைது செய்யப்பட்டுள்ளார்.
லேட்டஸ்ட் செய்திகள்
பொது மக்களின் பயன்பாட்டிற்கு பெட்ரோல் நிலையத்தின் கழிப்பறைகள் அல்ல.., நீதிமன்றம் உத்தரவு!
June 22, 2025
“நாங்க ஆட்சிக்கு வந்தால் பெண்களுக்கு ரூ.3,000 வழங்கப்படும்”…சமாஜ்வாதி கட்சி தலைவர் அகிலேஷ் பேச்சு!
June 22, 2025