டவ்-தே புயல் : தமிழகத்தின் 4 மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்பு – வானிலை மையம்..!!

Default Image

டவ்-தே புயல் காரணமாக தமிழகத்தின் 4 மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்பு என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. 

அரபிக் கடலில் நிலை கொண்டிருக்கும் காற்றழுத்த தாழ்வு மண்டலமானது, இன்று காலை புயலாக வலுப்பெற்றது. இதன் எதிரொலியாக தமிழகத்தில் பல இடங்களில் மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த டவ்-தே புயல் வருகின்ற 18 ஆம் தேதி குஜராத்தில் கரையை கடக்கவுள்ளது.

இந்நிலையில் டவ் – தே புயல் காரணமாக தமிழகத்தின் திண்டுக்கல், நீலகிரி, கோவை, தேனி ஆகிய 4 மாவட்டங்களில் இடியுடன் கூடிய மிக கனமழைக்கு வாய்ப்புள்ளதாகவும், கன்னியாகுமரி, சேலம், கிருஷ்ணகிரி, ஈரோடு ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

மேலும் டவ்-தே புயல் கர்நாடகா கரையோரத்தில் இருந்து 120 கி.மீ. தொலைவில் மையம் கொண்டுள்ளதாகவும், இதன் காரணமாக 150 – 160 கீ.மீ வேகத்தில் கற்றுவீசக்கூடும் என்றும், புயலின் தாக்கம் தமிழகம், மகாராஷ்ரம், கேரளா, கோவா, குஜராத் ஆகிய மாநிலங்களில் இருக்கும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

Today Live 10052025
Donald Trump
Indian Army
ilaiyaraaja - india pakistan war
Chief Minister J&K
Jammu Kashmir
scattered missile parts