#HelicopterCrash : குன்னூர் விரைகிறார் விமானப்படை தளபதி விவேக் ராம் சவுத்ரி..!

முப்படைகளின் தலைமை தளபதி பிபின் ராவத் பயணம் செய்த ராணுவ ஹெலிகாப்டர் விபத்திற்கு உள்ளான இடத்திற்கு, விமானப்படை தளபதி விவேக் ராம் சவுத்ரி நேரில் வந்து ஆய்வு செய்கிறார்.
ராணுவ ஹெலிஹாப்டர் குன்னூர் அருகே வானில் பறந்து கொண்டிருந்தபோது விபத்துக்குள்ளாகி முழுமையாக எரிந்துள்ளது.சூலூர் விமானப்படை தளத்தில் இருந்து வெலிங்க்டனுக்கு சென்ற போது, காட்டேரி என்ற பகுதி அருகில் கீழே விழுந்து விபத்துக்குள்ளானது. இந்த விமானத்தில், முப்படைகளின் தளபதி பிபின் ராவத் உட்பட14 பேர் பயணித்துள்ளனர்.
இந்த விபத்தில் 7 இராணுவ அதிகாரிகள் உயிரிழந்தனர். ஏற்கனவே 4 பேரின உடல்கள் இறந்த நிலையில் மீட்கப்பட்டது. இதைத்தொடர்ந்து, காயங்களுடன் மீட்கப்பட்ட 3 பேர் சிசிக்சை பலனின்றி உயிரிழந்தனர். இந்நிலையில், முப்படைகளின் தலைமை தளபதி பிபின் ராவத் பயணம் செய்த ராணுவ ஹெலிகாப்டர் விபத்திற்கு உள்ளான இடத்திற்கு, விமானப்படை தளபதி விவேக் ராம் சவுத்ரி நேரில் வந்து ஆய்வு செய்கிறார்.
லேட்டஸ்ட் செய்திகள்
பாகிஸ்தான் ஏவுகணை சோதனை வெற்றி! வீடியோ வெளியீடு!
May 3, 2025