காணாமல் போன சிஆர்பிஎஃப் வீரரைக் கண்டுபிடித்து தர கோரிய வழக்கில் சிபிஐ பதிலளிக்க உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது.
சிஆர்பிஎஃப் வீரர் அண்ணாதுரையை கண்டுபிடித்து தர கோரி உயர்நீதிமன்ற மதுரை கிளையில் அவரது மனைவி வழக்கு தொடர்ந்திருந்தார். அந்த மனுவில் கடந்த 2019 ஜூலையில் டெல்லி சென்றதாக போனில் பேசிய அண்ணாதுரை பிறகு தொடர்பு கொள்ள முடியவில்லை என மனைவி புகார் கொடுத்தார்.
இந்த மனுவை விசாரித்த உயர்நீதிமன்ற மதுரை கிளை சிபிஐ பதிலளிக்க உத்தரவு பிறப்பித்துள்ளது.