அதிமுக அரசு எண்ணிலடங்கா திட்டங்களை அதிமுக அரசு நிறைவேற்றியுள்ளது என முதல்வர் பழனிசாமி தேர்தல் பிரச்சாரத்தில் தெரிவித்துள்ளார்.
திருப்பூர் மாவட்டத்தில் இன்று முதல் 2 நாட்கள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தேர்தல் பிரச்சாரம் மோற்கொள்கிறார். முதல் நாளான இன்று அவிநாசி புதிய பேருந்து நிலையம் அருகில் தனது பிரச்சாரத்தை தொடங்கியுள்ளார். அப்போது மக்கள் மத்தியில் முதல்வர் பழனிசாமி, தமிழக மக்களின் மகத்தான ஆதரவோடு மீண்டும் முதலமைச்சராக வந்து அடிக்கல் நாட்டப்பட்ட அத்திக்கடவு-அவிநாசி திட்டத்தை துவக்கி வைப்பேன் என தெரிவித்துள்ளார்.
விவசாயிகளின் நலனுக்காக குடிமராமத்து பணி செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதுபோன்று எண்ணிலடங்கா திட்டங்களை அதிமுக அரசு நிறைவேற்றியுள்ளது. மேலும், எம்ஜி.ஆர், ஜெயலலிதா ஆட்சியில் போடப்பட்ட திட்டங்களும் நிறைவேற்றப்படுகின்றன என குறிப்பிட்டுள்ளார். வாரிசு அரசியல் செய்கின்ற கட்சி திமுகதான். முதலில் கலைஞர், தற்போது ஸ்டாலின், அடுத்து உதயநிதி ஸ்டாலின் என குடும்ப அரசியல் செய்து வருகிறார்கள். அவர்கள் மக்களுக்காக கட்சி நடத்தவில்லை, வீட்டு மக்களுக்காக கட்சி நடத்தி வருகிறார்கள் என்று குற்றசாட்டியுள்ளார்.
சென்னை : நடிகர் விஜய் சேதுபதியின் மகன் சூர்யா விஜய் சேதுபதி, ‘பீனிக்ஸ்’ திரைப்படத்தில் ஹீரோவாக அறிமுகமாகிறார். ஏற்கனவே, இந்த…
டெல்லி : 2024 டி20 உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் இந்திய அணி சிறப்பாக விளையாடி கோப்பையை வென்றது இன்னும் ஒரு மறக்க முடியாத…
கடலூர் : மாவட்டம் சிதம்பரத்தில் அதிர்ச்சியடைய வைக்கும் வகையில் சம்பவம் ஒன்று நடந்துள்ளது. மடப்புரம் பகுதியில் தன்னுடைய குடும்பத்துடன் அர்ஜுனன் என்ற…
மத்தியப் பிரதேசம் : மாநிலத்தின் முதல்வர் கான்வாயில் இருந்த வாகனங்கள், ஜூன் 26, 2025 அன்று ரத்லம் மாவட்டத்தில் நடுவழியில்…
சென்னை : கோக்கைன் போதைப்பொருள் பயன்படுத்தியதாக நடிகர் ஸ்ரீகாந்த் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், வழக்கின் விசாரணை மேலும் தீவிரமடைந்து அடுத்தகட்டமாக இந்த…
ஈரான் : இஸ்ரேல் மற்றும் ஈரான் இரண்டு நாட்டிற்கும் இடையே எழுந்த போரின் காரணமாக பெரும் பதற்றம் ஏற்பட்டிருந்தது. அந்த பதற்றத்தை…