தினகரன் கையில் அதிமுக இருந்தால் ..இன்று ஸ்டாலின் CM இல்லை ..! – அண்ணாமலை

Published by
அகில் R

Annamalai : அதிமுக கட்சி டிடிவி.தினகரனிடம் இருந்தால் ஸ்டாலின் தற்போது முதலமைச்சர் ஆகியிருக்க முடியாது என அண்ணாமலை பேசியுள்ளார்.

தமிழகத்தில் மக்களவை தேர்தலுக்கான பிரச்சாரம் பரபரப்பாக நடைபெற்று வருகிறது.  பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் அம்மா மக்கள் முன்னேற்றக் கழக கட்சிக்கு 2 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. அக்கட்சி பொதுச்செயலாளர் டி.டி.வி தினகரன் தேனி தொகுதியில் போட்டியிடுகிறார்.

தேனி தொகுதியில் டிடிவி தினகரன் போட்டியிடுவதால். தேர்தலுக்கான தீவிர பிரச்சாரத்தில் தற்போது ஈடுபட்டு வருகிறார். அவருக்கு ஆதரவாக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார்.

அந்த பிரச்சாரத்தில் அண்ணாமலை பேசுகையில், “மறைந்த முன்னாள் முதல்வரும் அதிமுக பொதுச்செயலாளருமான ஜெயலலிதா அம்மையார் இங்கு நடப்பதை எல்லாம் மேலிருந்து ஆண்டவனோடு பார்த்துக் கொண்டுதான் இருக்கிறார். அதிமுக கட்சி என்றாலே அது ஒரு ஒப்பந்தக்காரர்களுக்கான கட்சி என்று மாறிவிட்டது.  ஒப்பந்தக்காரர்களுக்கு எனவே அதிமுக கட்சியை எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் தாரைவார்த்து விட்டார். மேலும், அவர் நிறுத்தியிருக்கிற வேட்பாளர்களை பார்த்தாலே அது உங்களுக்கு தெரியும்.

அதிமுக தொண்டர்களில் இருக்கும் அனைவரும் டி.டி.வி தினகரன் பக்கமே உள்ளனர். இந்த தேர்தல் முடிந்த பிறகு அதிமுக கட்சி டி.டி.வி தினகரனின் கைவசம் ஆகும். அதே போல் டி.டி.வி தினகரன் கையில் அதிமுக கட்சி சென்றிருந்தால் இன்றைக்கு முக.ஸ்டாலின் அவர்கள் முதலமைச்சராக இருந்திருக்க மாட்டார்”, என்று தேனியில் திவர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வந்த தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை பிரச்சாரத்தில் கூறியிருந்தார்.

Recent Posts

GTvsSRH : சுழற்றிப்போட்ட சுப்மன் – பட்லர் புயல்…அதிரடி ஹைதராபாத்துக்கே இந்த அடியா?

அகமதாபாத் : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணியும், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் அகமதாபாத் நரேந்திர மோடி மைதானத்தில்…

2 hours ago

“ஜிஎஸ்டியால் வரிச்சுமை குறைந்துள்ளது!” நிர்மலா சீதாராமன் பேச்சு!

சென்னை : இன்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் சென்னையில் செய்தியாளர்களை சந்தித்து பல்வேறு கேள்விகளுக்கு பதில் அளித்தார். அப்போது…

5 hours ago

ஈரோடு இரட்டை கொலை., என்ன நடவடிக்கை எடுத்துள்ளோம்? அமைச்சர் முத்துசாமி பேட்டி!

ஈரோடு : பண்ணை வீட்டில் தனியாக இருந்த தம்பதி கொலை செய்யப்பட்டதாக நேற்று இரவு ஈரோடு பகுதி போலீசாருக்கு தகவல்…

5 hours ago

தவெக – பாஜக கூட்டணியா? நயினார் நாகேந்திரன் பதில்!

நெல்லை : இன்னும் ஒரு வருடத்திற்குள் தமிழக சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளதால் தற்போதே கூட்டணி குறித்த பேச்சுக்கள் அரசியல்…

6 hours ago

ரூ.21,000 கோடி சம்பாதித்த இந்திய யூடியூபர்கள்! யூடியூப் CEO தகவல்!

மும்பை : WAVES 2025 மாநாடு நேற்று மும்பையில் தொடங்கியது. பிரதமர் நரேந்திர மோடி நேற்று விழாவில் கலந்து கொண்டு…

8 hours ago

6-ம் தேதி மழை இருக்கு.! எங்கெல்லாம் தெரியுமா? வானிலை மையம் கொடுத்த அப்டேட்.!

சென்னை : தென்னிந்திய பகுதிகளின் மேல், வளிமண்டல கீழடுக்கு பகுதிகளில், கிழக்கு மற்றும் மேற்கு திசை காற்று சந்திக்கும் பகுதி…

9 hours ago