அதிமுகவின் முகக்கவசத்தை அகற்றினால் ஆர்எஸ்எஸ், பாஜக தான் தெரியும் – ராகுல் காந்தி

Published by
பாலா கலியமூர்த்தி

மு.க.ஸ்டாலின் தமிழகத்தின் முதல்வராக பொறுப்பேற்கப்போகிறார் என்று காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி தெரிவித்துள்ளார்.

வரும் சட்டப்பேரவை திமுக தலைமையிலான மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் சேலம் சீலநாயக்கன்பட்டியில் நடைபெற்ற தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் பேசிய  காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி, இது பழைய அதிமுக என்று யாரும் நினைக்கக்கூடாது என்றும் தற்போது இருப்பது மாஸ்க் அணிந்த அதிமுக எனவும் விமர்சித்துள்ளார்.

அதிமுகவின் முகக்கவசத்தை அகற்றினால் ஆர்எஸ்எஸ், பாஜக தான் தெரியும். பழைய அதிமுக போய்விட்டது. இன்றைக்கு ஆர்எஸ்எஸ், பாஜகவினால் இயக்கப்படும் அதிமுக உள்ளது. தமிழக மாணவர்களை பாதிக்கும் நீட் தேர்வை எதிர்த்து மத்திய அரசிடம் முதல்வர் எதுவும் கேட்கவில்லை. தமிழ்நாடுதான் இந்தியா, இந்தியாதான் தமிழ்நாடு என தெரிவித்துள்ளார்.

மு.க.ஸ்டாலின் தமிழகத்தின் முதல்வராக பொறுப்பேற்கப்போகிறார். தேர்தல் முடிவுகளை பார்க்காமலேயே என்னால் இதனை சொல்ல முடியும். ஏனென்றால், அது நீங்கள் எடுத்த முடிவுதான். தங்களது சில நண்பர்களின் நலனுக்காக மோடியும், அமித்ஷாவும் இந்திய மக்கள் மீது தாக்குதல் நடத்துகின்றனர் என குற்றசாட்டினார்.

பிரதமர், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா காலில் விழ ஒரு தமிழர் கூட விரும்ப மாட்டார்கள். தமிழக முதல்வரும் அதை விரும்பவில்லை. ஆனால், அதிமுகவினர் செய்கின்றனர். புலனாய்வுத் துறை மத்திய அரசின் வசம் இருப்பதால் தவறு செய்த அதிமுக முதல்வர் தலைகுனிய கட்டாயம் நிலை உள்ளது என குறிப்பிட்டுள்ளார்.

மேலும் பிரதமர் மோடி செய்துள்ள தவறு குறித்து அவரிடம் ஒரு வார்த்தை கூட பேசியது இல்லை முதல்வர் பழனிசாமி. விவசாயிகளுக்கு எதிரான வேளாண் சட்டங்களை ஏன் நிறைவேற்றினீர்கள் என மோடியிடம் எடப்பாடி கேட்க மாட்டார். புதிய கல்விக் கொள்கைக்கு எதிர்ப்பு தெரிவிக்க மாட்டார் என விமர்சித்துள்ளார்.

Published by
பாலா கலியமூர்த்தி

Recent Posts

சீறி பாய்ந்த ”ஆகாஷ் பிரைம்” வான் பாதுகாப்பு அமைப்பு.! லடாக்கில் சோதனை வெற்றி.!

சீறி பாய்ந்த ”ஆகாஷ் பிரைம்” வான் பாதுகாப்பு அமைப்பு.! லடாக்கில் சோதனை வெற்றி.!

லடாக் : லடாக்கில் 15,000 அடி உயரத்தில் இந்திய ராணுவம் உள்நாட்டு ஆகாஷ் பிரைம் வான் பாதுகாப்பு அமைப்பை வெற்றிகரமாக…

37 minutes ago

”அடுத்து மரங்களோட ஒரு மாநாடு நடத்தப்போறேன்” – சீமான் அதிரடி அறிவிப்பு..!

திருச்சி : நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், இன்று (ஆகஸ்டு 17) திருச்சியில் "மரங்களின் மாநாடு" நடத்தப்படும்…

55 minutes ago

“இவ்வளவு அசிங்கப்பட்டுமா அந்தக் கூட்டணியில் தொடரணுமா?” விசிக, கம்யூ. கட்சிகளுக்கு இபிஎஸ் அழைப்பு.!

கடலூர் : அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமி சிதம்பரத்தில் தனது "மக்களைக் காப்போம், தமிழகத்தை மீட்போம்" என்ற முழக்கத்துடன்…

1 hour ago

சிரியா மீது இஸ்ரேல் பயங்கர தாக்குதல்.! “சிரியா எல்லையில் இஸ்ரேல் மக்கள் இருக்கவேண்டாம்” – நெதன்யாகு எச்சரிக்கை.!

டமாஸ்கஸ் : இஸ்ரேல் தனது அண்டை நாடான சிரியாவில் ஒரு பெரிய வான்வழித் தாக்குதலை நடத்திருக்கிறது. காசாவில் ஹமாஸ் மற்றும்…

2 hours ago

நாளை (ஜூலை 17) திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்.!

சென்னை : முதல்வரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நாளை நடைபெறும் என திமுக…

3 hours ago

இங்கிலாந்தில் பழமையான மரத்தை வெட்டிய இருவருக்கு 4 ஆண்டுகள் சிறை தண்டனை.!

இங்கிலாந்தில் 200 ஆண்டுகள் பழமையான மற்றும் அந்நாட்டின் அடையாளமாக விளங்கிய சைக்காமோர் கேப் மரத்தை வெட்டியதற்காக இரண்டு நபர்களுக்கு 4…

4 hours ago