உண்மையாக இயக்கத்திற்காக எதிர்பார்ப்பு நினைப்பவர்களை உயர்த்தி தூக்கி பிடிப்பவர் முதல்வர் மு.க.ஸ்டாலின் என சேகர்பாபு பேட்டி.
சென்னையில் கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி நலத்திட்டங்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் தமிழக இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.
இந்த நிகழ்ச்சிக்குப் பின் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், தமிழக முதல்வர் கிறிஸ்மஸ் பெருவிழாவில் கலந்து கொண்டு மக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கி இருக்கிறார். முதல்வர் கொளத்தூர் சட்டமன்றத் தொகுதியில் இதேபோன்று மக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கும் நிகழ்ச்சி நிகழ்ச்சி ஏற்பாடு செய்திருக்கிறார். இதில் நமது பேராயர் ஜார்ஜ் ஸ்டீபன் அவர்களும் முதல்வரின் அழைப்பின் பேரில், கலந்து கொள்ளவுள்ளார்.
இதிலிருந்து என்ன தெரிகிறது என்றால், உயர்ந்தவர் தாழ்ந்தவர், இன்னார் இனியவர் என்றில்லாமல் அனைவரும் ஒன்றே. தமிழகத்தை பொருத்தவரை சாதி, மதம், இனங்களுக்கு அப்பாற்பட்ட மனிதநேயத்தோடு மக்கள் ஒற்றுமையோடும் என்றும் வாழ விரும்பும் முதல்வர் இன்றைய தமிழக முதல்வர் என்பது நிரூபணமாகிறது.
மேலும் அவரிடம், திமுக இளைஞரணி செயலாளர் உதய நிதி அமைச்சர் பதவி வழங்க வேண்டும் என்று பல்வேறு அமைப்புகளும் கோரிக்கை வைத்துள்ளனர். இது தொடர்பாக உங்களின் நிலைப்பாடு என்ன என செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.
அதற்கு பதிலளித்த அவர் உண்மையாக இயக்கத்திற்காக எதிர்பார்ப்பு நினைப்பவர்களை உயர்த்தி தூக்கி பிடிப்பவர் முதல்வர் மு.க.ஸ்டாலின். அனைத்து செயல்பாடுகளிலும் தமிழக முதல்வரை போலவே உதயநிதி ஸ்டாலினும் செயல்பட்டுக் கொண்டிருக்கிறார். ஆகவே தமிழக முதல்வர் நிச்சயம் அதற்கான அங்கீகாரத்தை வழங்குவார். மேலும் மக்கள் பணி சிறப்படைய அவரும் அமைச்சரவையில் இடம் பெறுவார் என்று தெரிவித்தார்.
லீட்ஸ் : இந்தியாவின் முன்னணி வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்ப்ரீத் பும்ரா, இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் SENA நாடுகளில் (தென்னாப்பிரிக்கா,…
மும்பை : இந்தியாவின் முன்னணி தொலைத்தொடர்பு நிறுவனங்களான ரிலையன்ஸ் ஜியோ மற்றும் ஏர்டெல், பயனர்களுக்கு குறைந்த விலையில் அதிக டேட்டா…
தெஹ்ரான் : இஸ்ரேல்-ஈரான் மோதல் தீவிரமடைந்து 10-வது நாளை எட்டியுள்ள நிலையில், இதில் கூடுதல் பதற்றத்தை ஏற்படுத்தும் விதமாக இதுவரை…
இஸ்ரேல்-ஈரான் மோதல் என்பது 10-வது நாளை எட்டியுள்ள நிலையில், அமெரிக்கா முதல் முறையாக ஈரான் மீது நேரடி தாக்குதல் நடத்தி…
லீட்ஸ் : இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் துணைக் கேப்டனும், விக்கெட் கீப்பர்-பேட்ஸ்மேனுமான ரிஷப் பண்ட்,…
ஈரான் : இந்த போர் எப்போது நிற்கும் என்கிற அளவுக்கு கேள்விகளை இஸ்ரேல் - ஈரான் நாடுகளுக்கு இடையே ஏற்பட்ட போர்…