#Breaking: அதிகரிக்கும் கொரோனா.. அதிகாரிகளுடன் தலைமை செயலாளர் ஆலோசனை!

With the spread of corona in Tamil Nadu, Chief Secretary Rajiv Ranjan is holding consultations in Chennai.

தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில், தலைமை செயலாளர் ராஜீவ் ரஞ்சன் சென்னையில் ஆலோசனை நடத்தி வருகிறார்.

தமிழகத்தில் கொரோனா பரவல் மீண்டும் அதிகரிக்க தொடங்கியது. அந்தவகையில் நான் ஒன்றுக்கு 3,500-க்கும் மேற்பட்டோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு வரும் நிலையில், கொரோனா பரவலை கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

கொரோனாக்கு எதிராக தடுப்பூசி போடப்பட்டு வரும் நிலையில், கொரோனா பரவல் அதிகரிப்பது மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்துகிறது. கொரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில், தலைமை செயலாளர் ராஜீவ் ரஞ்சன் ஆலோசனை நடத்தி வருகிறார். இந்த ஆலோசனை கூட்டத்தில் சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணண், வருவாய்த்துறை அதிகாரி, வருவாய் நிர்வாக ஆசிரியர், டிஜிபி திரிபாதி, உள்ளிட்டோர் இந்த ஆலோசனை கூட்டத்தில் கலந்துகொண்டனர்.