இந்தியன் -2 படப்பிடிப்பு விபத்து.! விசாரணைக்கு இயக்குனர் சங்கர் ஆஜர் .!

ஷங்கர் இயக்கத்தில் கமல் நடித்து வரும் இந்தியன்-2 படப்பிடிப்பின் போது கிரேன் விழுந்து விபத்துக்குள்ளானது.இந்த விபத்தில் உதவி இயக்குநர் உட்பட மூவர் இறந்தனர்.
இந்த வழக்கை தற்போது சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் விசாரித்து வருகின்றனர். துணை ஆணையர் நாகஜோதி விசாரணை அதிகாரியாக நியமிக்கப்பட்டு உள்ளார். விபத்து தொடர்பாக விசாரணைக்கு ஆஜராக கமல், ஷங்கருக்கு உட்பட 23 பேருக்கு சம்மன் அனுப்பப்பட்டது.
இந்நிலையில் கமல்ஹாசன் உயர் நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றை தொடர்ந்தார். அதில் தன்னை விசாரணை என்ற பெயரில் துன்புறுத்துவதாகவும், நேரில் ஆஜராவதில் இருந்து விலக்கு அளிக்கக் வேண்டும் என கூறியிருந்தார்.நடிகர் கமல்ஹாசனின் கோரிக்கையை ஏற்று இன்று ஈவிபி பிலிம் சிட்டியில் விசாரணைக்கு நேரில் ஆஜராக வேண்டிய அவசியமில்லை என கூறியது .
இந்நிலையில் இன்று ஈவிபி பிலிம் சிட்டியில் இந்தியன்-2 படப்படிப்பு தளத்தில் நடந்த விபத்து குறித்து இயக்குநர் ஷங்கர் உள்ளிட்ட படக்குழுவினரிடம் விசாரணை நடைபெற்று வருகிறது. சம்பவம் நடந்த இடத்தில் விபத்து குறித்து விளக்கம் அளித்து வருகின்றனர்.
லேட்டஸ்ட் செய்திகள்
எனக்கு அலர்ஜி இருக்கு சார் போதைப்பொருள் பயன்படுத்த வாய்ப்பு இல்லை! கிருஷ்ணா கொடுத்த வாக்குமூலம்!
June 25, 2025
ஈரான் கிட்ட கச்சா எண்ணெயை தாராளமா இறக்குமதி செய்யுங்க! சீனாவுக்கு ‘கிரீன் சிக்னல்’ காட்டிய டிரம்ப்?
June 25, 2025