தமிழ்நாடு

சுவையான மாங்காய் மீதுதான் கல்லடி படும் – அண்ணாமலை

Published by
லீனா

கோபிச்செட்டிபாளையத்தில் நடைப்பயணத்தின் போது தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை அவர்கள் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்துள்ளார். அப்போது பேசிய அவர், எந்த மாங்காய் மரம் சுவையாக இருக்கிறதோ அதன்மீது தான் கல்லெடுத்து அடிப்பார்கள்.

கல்லடிபட்டு தான் அந்த மாங்காய் மரம் மக்களுக்கு மாம்பழத்தை கொடுக்கும். அதே போல் நான் விமர்சனத்திற்கு அஞ்சுபவன் கிடையாது. எனக்கென்று தனி பாணியாக ஒரு அரசியல் இருக்கிறது. அந்த அரசியலில் எனக்கு முன்பிருந்த அரசியல்வாதிகள் இப்படி தான் அரசியல் செய்தார்கள் என அப்படிப்பட்ட அரசியலை செய்ய விரும்பவில்லை.

என்னுடைய அரசியல் மாற்று அரசியல். நான் தேசிய கட்சியில் இருந்தாலும், ஒரு பெரிய கட்சியிலிருந்தாலும் என்னை பொறுத்தவரை தமிழகத்தில் இப்பொது நடக்கக்கூடிய எந்த அரசியலும் மக்களுக்கு பிடிக்கவில்லை.

தேர்தலில் மக்களுடன் தான் பாஜக கூட்டணி அமைத்து வெற்றி பெற்றுள்ளது. தற்போதும் அப்படிதான் என தெரிவித்துள்ளார். அதிமுக – பாஜக கூட்டணி முறிவுக்கு பின், அதிமுக தரப்பிலும், பாஜக தரப்பிலும் மாறி மாறி விமர்சனங்கள் எழுந்து வரும் நிலையில், அண்ணாமலை இவ்வாறு பேட்டியளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Published by
லீனா

Recent Posts

சிவகாசி பட்டாசு ஆலை விபத்து – முதல்வர் மு.க ஸ்டாலின் நிவாரணத்தொகை அறிவிப்பு..!

விருதுநகர் : விருதுநகர் மாவட்டத்தின் சாத்தூர் வட்டம், சின்னக்காமன்பட்டி கிராமத்தில் உள்ள தனியார் பட்டாசு ஆலையில் இன்று காலை 8:30…

6 minutes ago

இளைஞர் அஜித்குமார் மரணம்: மானாமதுரை டி.எஸ்.பி. சண்முக சுந்தரம் சஸ்பெண்ட்.!

சென்னை : சிவகங்கை மாவட்டம், மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயில் காவலாளியான அஜித் குமார், நகை திருட்டு வழக்கில் சந்தேகத்தின் பேரில்…

36 minutes ago

இளைஞர் மரணம்: “தகவல் தெரிந்ததும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது” – முதலமைச்சர் ஸ்டாலின்.!

சிவகங்கை : மடப்புரம் கோயில் காவலாளி அஜித் குமார் மரண வழக்கு தொடர்பாக, முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், தகவல் தெரிந்த…

51 minutes ago

நெஞ்சை உலுக்கும் காட்சி.., அஜித் குமாரை போலீசார் பிரம்பால் தாக்கிய வீடியோ.!

சென்னை : சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகே மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயிலில் காவலாளியாக பணியாற்றிய அஜித் குமார், நகை திருட்டு…

1 hour ago

போலீஸ் அடித்ததில் அஜித்துக்கு சிறுநீரில் ரத்தம் வந்தது” நேரில் பார்த்தவர் சொன்ன அதிர்ச்சி தகவல்!

சிவகங்கை :மாவட்டம், திருப்புவனம் அருகே மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயிலில் தற்காலிக காவலாளியாகப் பணியாற்றிய அஜித்குமார் (வயது 27), நகை திருட்டு…

2 hours ago

அடிப்பதற்கு காவல்துறை எதற்கு? தமிழக அரசுக்கு உயர்நீதிமன்ற மதுரை அமர்வு சரமாரி கேள்வி!

சிவகங்கை : மாவட்டம், திருப்புவனம் அருகே மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயிலில் தற்காலிக காவலாளியாகப் பணியாற்றிய அஜித்குமார் (வயது 27), நகை…

3 hours ago