சென்னை விமான நிலையத்தில் அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களை சந்தித்து பேசியுள்ளார். அப்போது பேசிய அவர், மத்திய அமைச்சரவையில் 2 இடங்கள் கேட்பதாக வெளியாகும் தகவல்கள் உண்மையானது அல்ல என்று தெரிவித்துள்ளார்.
மேலும், நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வரப்பட்டால் ஆட்சி நிச்சயமாக களையும் என்பது குறித்த கேள்விகளை செய்தியாளர்கள் எழுப்பினர். இவர்களது இந்த கேள்விக்கு அமைச்சர் ஜெயக்குமார் மு.க.ஸ்டாலின் பாணியில் ‘wait and see’ என பதிலளித்துள்ளார்.