இயேசு அழைக்கிறார் நிறுவனத்திற்கு சொந்தமான 28 இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனை மேற்கொண்ட நிலையில், 2-வது நாளாக சோதனை தொடர்கிறது.
இயேசு அழைக்கிறார் நிறுவனத்தின் தலைவரான பால் தினகரன் அவர்களுக்கு சொந்தமான இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். சென்னை பாரிமுனை, அடையாறு, கோவை காருண்யா பல்கலை உள்பட தமிழகத்தில் 28 இடங்களில்வருமானவரித்துறையினர்சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த சோதனை நேற்று தொடங்கிய நிலையில், இன்று 2-வது நாளாகவும் சோதனை தொடர்ந்து வருகிறது. கோவையில் உள்ள காருண்யா பலக்லைக்கழகம் மற்றும் கல்வி நிறுவனங்களில் சிக்கிய ஆவணங்களை வருமான வரித்துறை அதிகாரிகள் தொடர்ந்து ஆய்வு செய்து வருகின்றனர்.