கோயம்புத்தூர் மாநகராட்சிக்கு கொரோனா தடுப்பு பணிக்கென 100 தற்காலிக செவிலியர்கள் மூன்று மாத காலத்திற்கு நேர்காணல் மூலம் நியமிக்கப்பட உள்ளனர்.
தமிழகத்தில் கொரோனாவின் இரண்டாவது அலை காரணமாக நாள்தோறும் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை அதிகரித்து வந்த நிலையில் தற்போது கொரோனா பாதிப்பைக் கட்டுப்படுத்த தளர்வுகளற்ற ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால், கொரோனா பாதிப்பு சற்று குறைந்து வருகிறது.
இந்நிலையில், கொரோனா தடுப்பு பணியில் மருத்துவர்கள், செவிலியர்கள் முன் களப் பணியாளர்கள் அனைவரும் ஈடுபட்டு வருகின்றனர். கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் மருத்துவர்கள், செவிலியர்களுக்கு தற்காலிக வேலை வாய்ப்பு வழங்கப்பட்டு வருகிறது. கோவையில் தற்போது அதிகரித்து வரும் கொரோனா காரணமாக 100 தற்காலிக செவிலியர்களுக்கு வேலைவாய்ப்பு அறிவிக்கப்பட்டு உள்ளது.
இது குறித்து கோயம்புத்தூர் மாநகராட்சி வெளியிட்டுள்ள அறிக்கையில்,
கோயம்புத்தூர் மாநகராட்சிக்கு கொரோனா தடுப்பு பணிக்கென 100 தற்காலிக செவிலியர்கள் மூன்று மாத காலத்திற்கு நேர்காணல் மூலம் நியமிக்கப்பட உள்ளனர். அவர்களுக்கு மாதம் ரூ.12,000/- தொகுப்பூதியம் வழங்கப்படும். தகுதியுடைய நபர்கள் (செவிலியருக்கான குறைந்தபட்ச கல்வி தகுதி B.Sc Nursing/Diploma Nursing தேர்ச்சி பெற்றிருத்தல் வேண்டும்) 03.06.2021 காலை 10.00 மணிக்கு கீழ்காணும் அனைத்து அசல் மற்றும் ஒரு நகல் ஆவணங்களுடன் டவுன்ஹால் அருகில் அமைந்துள்ள கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் நேரில் ஆஜராகுமாறு கோரப்படுகிறது என மாநகராட்சி ஆணையாளர் மற்றும் தனி அலுவலர் திரு.பெ.குமாரவேல் பாண்டியன் இ.ஆ.ப.,தெரிவித்துள்ளார்கள்.
1.கல்விச் சான்றிதழ்கள்
2.இருப்பிட சான்று
3.சாதிச் சான்று
4.ஆதார் அட்டை
ஹைதராபாத் : ஐபிஎல் 2025-55 வது ஹைதராபாத்-டெல்லி இடையேயான போட்டி மழையின் காரணமாக கைவிடப்பட்டது. இதனால் இரு அணிகளுக்கும் தலா…
ஹைதராபாத் : சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகளுக்கு இடையிலான போட்டி ராஜீவ் காந்தி சர்வதேச மைதானத்தில் நடைபெற்று…
ஹைதராபாத் : சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகளுக்கு இடையிலான போட்டி ராஜீவ் காந்தி சர்வதேச மைதானத்தில் நடைபெற்று…
சென்னை : 42ஆவது வணிகர் தினத்தையொட்டி, இன்று சென்னை மதுராந்தகத்தில், தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் சார்பில் நடைபெற்ற வணிகர்…
சென்னை : நகைச்சுவை மன்னன் நடிகர் கவுண்டமணியின் மனைவி சாந்தி (67) காலமானார். காதல் திருமணம் செய்து கொண்ட கவுண்டமணி…
ஹைதராபாத் : ஐபிஎல் 2025 இன் 55 வது போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகளுக்கு இடையிலான…