சென்னை:ரூ.662 கோடியில் முடிவுற்ற திட்டப்பணிகளை மக்களுக்கு அர்பணித்தல்,900 வீடுகள் கொண்ட அடுக்குமாடி குடியிருப்புக்கு அடிக்கல் நாட்டல் உள்ளிட்ட பல்வேறு துறை சார்ந்த திட்டங்களை முதல்வர் ஸ்டாலின் அவர்கள் காணொலி வாயிலாக தொடங்கி வைத்துள்ளார்.
சென்னை தலைமைச்செயலகத்தில் இருந்தவாறு பல்வேறு துறை சார்ந்த திட்டங்களை முதல்வர் ஸ்டாலின் அவர்கள் காணொலி வாயிலாக தற்போது தொடங்கி வைத்துள்ளார்.அதன்படி,நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை சார்பில் மொத்தம் ரூ.662.22 கோடி மதிப்பீட்டிலான 17 முடிவுற்ற திட்டப் பணிகளை திறந்து வைத்து, 5 புதிய திட்டப் பணிகளுக்கு முதல்வர் அவர்கள் அடிக்கல் நாட்டினார்.
இதனைத் தொடர்ந்து,தமிழ்நாடு நகர்ப்புர வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் சார்பில் சிவகங்கை மாவட்டம்,கழனிவாசல் திட்டப்பகுதியில் ரூ.130.20 கோடி மதிப்பீட்டில் கட்டப்படவுள்ள 900 அடுக்குமாடிக் குடியிருப்பு பணிகளுக்கு முதல்வர் அடிக்கல் நாட்டினார்.
மேலும்,ரூ.2 கோடியே 93 இலட்சம் மதிப்பீட்டில் கள்ளக்குறிச்சி,தென்காசி, செங்கல்பட்டு,திருப்பத்தூர்,ராணிப்பேட்டை மற்றும் மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்களில் அமைக்கப்பட்டுள்ள 6 ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு அலுவலகங்களையும் முதல்வர் ஸ்டாலின் அவர்கள் திறந்து வைத்துள்ளார்.
சென்னை : நடிகர் விஜய் சேதுபதியின் மகன் சூர்யா விஜய் சேதுபதி, ‘பீனிக்ஸ்’ திரைப்படத்தில் ஹீரோவாக அறிமுகமாகிறார். ஏற்கனவே, இந்த…
டெல்லி : 2024 டி20 உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் இந்திய அணி சிறப்பாக விளையாடி கோப்பையை வென்றது இன்னும் ஒரு மறக்க முடியாத…
கடலூர் : மாவட்டம் சிதம்பரத்தில் அதிர்ச்சியடைய வைக்கும் வகையில் சம்பவம் ஒன்று நடந்துள்ளது. மடப்புரம் பகுதியில் தன்னுடைய குடும்பத்துடன் அர்ஜுனன் என்ற…
மத்தியப் பிரதேசம் : மாநிலத்தின் முதல்வர் கான்வாயில் இருந்த வாகனங்கள், ஜூன் 26, 2025 அன்று ரத்லம் மாவட்டத்தில் நடுவழியில்…
சென்னை : கோக்கைன் போதைப்பொருள் பயன்படுத்தியதாக நடிகர் ஸ்ரீகாந்த் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், வழக்கின் விசாரணை மேலும் தீவிரமடைந்து அடுத்தகட்டமாக இந்த…
ஈரான் : இஸ்ரேல் மற்றும் ஈரான் இரண்டு நாட்டிற்கும் இடையே எழுந்த போரின் காரணமாக பெரும் பதற்றம் ஏற்பட்டிருந்தது. அந்த பதற்றத்தை…