#JustNow: “முற்பகல் 11 முதல் பிற்பகல் 3 மணி வரை பொதுமக்கள் வீடுகளுக்குள் இருப்பது நல்லது” – அமைச்சர்

Published by
பாலா கலியமூர்த்தி

அவசியம் இல்லாமல் பகல் 11 முதல் பிற்பகல் 3 மணி வரை வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம் என அமைச்சர் அறிவுறுத்தல்.

தமிழகத்தில் கோடைக்காலம் என்பதால் கடுமையான வெப்பம் நிலவுகிறது. அந்த வகையில் தமிழகத்தில் பல மாவட்டங்களில் வெயிலின் தாக்கம் 100 டிகிரியை தாண்டியுள்ளது. இதனால் மக்கள் சீராமத்திற்கு உள்ளாகி வருகின்றனர். அது மட்டுமல்லாமல் இன்று முதல் மே 28 ஆம் தேதி வரை 25 நாட்களுக்கு ‘அக்னி நட்சத்திரம்’ எனப்படும் கத்திரி வெயில் தொடங்கியுள்ளது. ஏற்கனவே பல மாவட்டங்களில் 100 பாரன்ஹீட்டை தாண்டி வெப்பம் வாட்டி வதைக்கிறது.

இந்த நிலையில், சென்னையில் நடைபெற்ற கோடை வெயில் குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சிக்கு பின் செய்தியாளர்களிடம் பேசிய மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், கோடைகாலம் முடியும் வரை மக்கள் அனைவரும் தண்ணீர் பாட்டிலை வெளியே எடுத்து செல்வது நல்லது. தாகம் இருந்தாலும், இல்லாவிட்டாலும் கோடை காலத்தில் போதிய அளவு நீர் குடிக்க வேண்டும். கோடையில் வெளியே செல்லும் போது முடிந்தவரை, எலுமிச்சை உள்ளிட்ட பல சாறுகளை பகிருங்கள் என்று அறிவுறுத்தல் வழங்கினார்.

அவசியம் இல்லாமல் பகல் 11 முதல் பிற்பகல் 3 மணி வரை வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம். வெயிலில் பயணிக்கும்போது தலையில் துண்டு, தொப்பி, துணி உள்ளிட்டவற்றை அணிந்துகொண்டு தலையை மறைத்து செல்வது என்பது நல்லது. கால்களில் செருப்பு இல்லாமல் செல்வதை தவிர்க்கவேண்டும். காற்றோட்ட வீடுகளில் தங்கியிருப்பது அவசியம். தேநீர், காப்பி போன்றவற்றை தவிர்க்க வேண்டும். பாட்டில்களில் அடைத்து வைத்துள்ள குளிர்பானங்களை தவிர்க்க வேண்டும் என்றும் குறிப்பிட்டார்.

மேலும், வெயில் காலத்தில் உடலில் பாதிப்பை ஏற்படுத்தும் என்பதால் மது அருந்துவதை குறைத்துக்கொள்ளுங்கள் எனவும் கூறினார். புரத சத்து அதிக உள்ள உணவுகளை தவிர்த்து பழைய உணவுகளை உட்கொள்ள கூடாது. வீட்டின் வாசலில் நிறுத்தப்பட்டுள்ள வாகனங்கள் மீது குழந்தைகளை ஏற்ற கூடாது. கோடை வெப்பத்தில் பாதிப்புக்குள்ளானவர்களுக்கு அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் படுக்கைகள் தயார் நிலையில் இருக்கிறது. எதாவது உடல் பாதிப்பு என்றால் மருத்துவமனையை உடனடியாக அணுக வேண்டும் என கோடை வெப்பத்தில் இருந்து மக்கள் எவ்வாறு தப்பிக்கலாம் என்பது குறித்து அமைச்சர் அறிவுரை வழங்கினார்.

Published by
பாலா கலியமூர்த்தி

Recent Posts

சரசரவென சரிந்து தத்தளித்த ராஜஸ்தான்…! 100 ரன்கள் வித்தியாசத்தில் மும்பை வெற்றி!

சரசரவென சரிந்து தத்தளித்த ராஜஸ்தான்…! 100 ரன்கள் வித்தியாசத்தில் மும்பை வெற்றி!

ஜெய்ப்பூர் : இன்று நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் மும்பை இந்தியன்ஸ் அணியும் ஜெய்ப்பூர் சவாய் மான்சிங் மைதானத்தில்…

1 hour ago

எத்தனை தொழில்நுட்பம் வந்தாலும் மொழி இருக்கும் – கமல்ஹாசன்!

நடிகரும் மக்கள் நீதி மையம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசன், கிரேஸி மோகன் எழுதிய '25 புத்தகங்கள்' வெளியீட்டு விழாவில் இன்று…

2 hours ago

அதிரடியில் அலறவிட்ட மும்பை…திணறிய ராஜஸ்தான்! டார்கெட் இது தான்!

ஜெய்ப்பூர் : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் மும்பை இந்தியன்ஸ் அணியும் ஜெய்ப்பூர் சவாய் மான்சிங் மைதானத்தில்…

3 hours ago

தீவிரவாதிகள் வேட்டையாடப்படுவார்கள் – அமித்ஷா ஆதங்கம்!

டெல்லி : ஏப்ரல் 22 -ஆம் தேதி ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் உள்ள பைசரன் புல்வெளியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில்…

4 hours ago

கட்டிடம் கட்டியாச்சு..அடுத்து திருமணம் தான்..நடிகர் விஷால் மகிழ்ச்சி!

சென்னை : பல்வேறு சிக்கல்களைக் கடந்து, கடந்த 2019ஆம் ஆண்டு தென்னிந்திய நடிகர் சங்க கட்டிட பணிகள் தொடங்கிய நிலையில்…

4 hours ago

“நீ சிங்கம் தான்” விராட் கோலிக்கு STR-ன் ‘அன்பு’ பதிவு!

சென்னை : இந்திய கிரிக்கெட் அணி மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகளின் நட்சத்திர பேட்ஸ்மேனாக உள்ளார் விராட் கோலி.…

7 hours ago