#BREAKING: கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் – உச்சநீதிமன்றம் இடைக்காலத் தடை..!

Published by
murugan

கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு நிலம் கையகப்படுத்தும் தமிழக அரசின் அரசாணையை உயர்நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது.

புதிதாக உருவாக்கப்பட்ட கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் கட்ட  வீரசோழபுரம் அர்த்தநாரீஸ்வரர் கோவிலுக்கு சொந்தமான 35 ஏக்கர் நிலத்தை அரசு தேர்வு செய்தது. இதற்கான அரசாணையை கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் அரசு வெளியிட்டது. இதைத்தொடர்ந்து, இதை எதிர்த்து ரங்கராஜன் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தார்.

அந்த மனுவில் ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த இந்த கோவிலுக்கு வருமானம் என்பது அங்கு இருக்கக்கூடிய நிலம் சார்ந்து தான் வருகிறது என தனது மனுவில் கூறியிருந்தார். இதைத் தொடர்ந்து சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி இந்த இடத்தை குத்தகைக்கு தான் எடுக்க வேண்டும். நிரந்தரமாக கூடாது, மாதம் வாடகையாக சிறு தொகையை கொடுக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு நிபந்தனைகளை விதித்து நிலத்தை கையகப்படுத்துவதற்கான அனுமதியை வழங்கி இருந்தார்.

பின்னர், உயர்நீதிமன்ற உத்தரவிற்கு இடைக்கால தடைவிதிக்க வேண்டும் என ரங்கராஜன் உச்சநீதிமன்றம் மனு தாக்கல் செய்தார். இந்த மனு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, நிலம் கையகப்படுத்த அரசாணைக்கு அனுமதி தந்த ஐகோர்ட்டு உத்தரவுக்கு உச்சநீதிமன்றம் இடைக்காலத்தடையை விதித்துள்ளது. இதனால், கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அமைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

Published by
murugan

Recent Posts

போர் பதற்றம்: ”பாகிஸ்தான் படங்கள், தொடர்கள் இருக்கவே கூடாது” – OTT-களுக்கு மத்திய அரசு அதிரடி உத்தரவு.!

போர் பதற்றம்: ”பாகிஸ்தான் படங்கள், தொடர்கள் இருக்கவே கூடாது” – OTT-களுக்கு மத்திய அரசு அதிரடி உத்தரவு.!

டெல்லி : இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் நிலவும் பதட்டமான சூழ்நிலைக்கு மத்தியில், மத்திய அரசு அடுத்த ஒரு பெரிய முடிவை…

10 minutes ago

”ஆபரேஷன் சிந்தூர் இன்னும் முடியவில்லை, மீண்டும் தொடரும்” – அமைச்சர் ராஜ்நாத் சிங்.!

டெல்லி: பஹல்காம் தாக்குதலுக்குப் பதிலடியாக ஆபரேஷன் சிந்தூரை செயல்படுத்தி பயங்கரவாதிகளின் முகாம்களை வேட்டையாடியது இந்தியா. இந்த நிலையில், ஆபரேஷன் சிந்தூர்…

23 minutes ago

பரபரக்கும் போர் சூழல்: லாகூரில் இருந்து அமெரிக்கர்கள் வெளியேற உத்தரவு.!

லாகூர் : பாகிஸ்தானின் லாகூரில் உள்ள HQ-9 வான் பாதுகாப்பு அமைப்பை இந்திய ராணுவம் தாக்கியது. இதில், சீனாவிடம் இருந்து…

1 hour ago

பாகிஸ்தானின் வான் தடுப்பு அமைப்பை சில்லி சில்லியாக்கிய இந்தியா.!

புதுடெல்லி: ஏப்ரல் 22 அன்று ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக, பாகிஸ்தான் மற்றும்…

2 hours ago

பதிலுக்கு பதில் தாக்குதல் தான்! பாகிஸ்தானுக்கு இந்தியா எச்சரிக்கை!

டெல்லி : பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் நேற்று இந்திய ராணுவம் ஆபரேஷன் சிந்தூர் எனும் பெயரில் பாகிஸ்தான்…

3 hours ago

ஆபரேஷன் சிந்தூரில் 100 பயங்கரவாதிகள் பலி! பாதுகாப்புத் துறை அமைச்சர் தகவல்!

டெல்லி : ஏப்ரல் 22-ல் காஷ்மீர் பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த பயங்கரவாத…

4 hours ago