காஞ்சிபுரம் வெடிவிபத்து; முதல்வர் மற்றும் பிரதமர் நிவாரணம் அறிவிப்பு.!

காஞ்சிபுரம் வெடிவிபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு முதல்வர் மற்றும் பிரதமர், இரங்கல்கள் மற்றும் நிவாரணம் அறிவித்துள்ளனர்.

காஞ்சிபுரம் வெடிவிபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு முதல்வர் மற்றும் பிரதமர், இரங்கல்கள் மற்றும் நிவாரணம் அறிவித்துள்ளனர்.

காஞ்சிபுரம், குருவி மலையில் உள்ள பட்டாசு ஆலையில் நேற்று திடிரென வெடி விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் 9 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் விபத்தில் காயமடைந்த 13-ற்கும் மேற்பட்டோர் காஞ்சிபுரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இது குறித்து முதல்வர் ஸ்டாலின் தனது அறிக்கையில், காஞ்சிபுரம் வெடிவிபத்து குறித்து மிகுந்த வேதனையடைந்தேன், உயிரிழந்தர்வர்களின் குடும்பத்திற்கு ஆழ்ந்த இரங்கல்களை தெரிவித்துக்கொள்கிறேன், மேலும் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு 3 லட்ச ரூபாயும், காயமடைந்தவர்களுக்கு 1 லட்ச ரூபாயும் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்குவதாக அறிவித்துள்ளார்.

unknown node

பிரதமர் மோடியும், காஞ்சிபுரம் வெடிவிபத்தில் உயிரிழந்தவர்களுக்கு தனது ஆழ்ந்த இரங்கல்களை தெரிவித்துள்ளார் மேலும் நிவாரணமாக உயிரிழந்தர்வர்களின் குடும்பத்திற்கு 2 லட்ச ரூபாயும், காயமடைந்தவர்களுக்கு 50,000 ரூபாயும் வழங்குவதாக அறிவித்துள்ளார்.unknown node