கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு… புதிய நீதிபதி முன்பு இன்று விசாரணை.!

கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு இன்று விசாரணைக்கு வருகிறது.
கொடநாடு எஸ்டேட் கொலை, கொள்ளை விவகாரம் தொடர்பான வழக்கு, உதகை நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. கடந்த ஏப்ரல் மாதம் ஒத்திவைக்கப்பட்ட இந்த வழக்கின் விசாரணை இன்று மீண்டும், உதகை மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் புதிதாக பொறுப்பேற்றுள்ள நீதிபதி முன் விசாரிக்கப்படுகிறது.
கடந்த 2017 ஆம் ஆண்டு நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே உள்ள கொடநாட்டில் மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு சொந்தமான எஸ்டேட் பங்களாவில், நடைபெற்ற கொலை, கொள்ளை சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த வழக்கானது முதலில் போலீசார் விசாரணை நடத்திவந்த நிலையில், வழக்கு சிபிசிஐடி வசம் மாற்றப்பட்டு விசாரிக்கப்பட்டு வருகிறது.
சிபிசிஐடி தலைமையிலான போலீசார் இந்த வழக்கை விசாரித்து வரும் நிலையில், கடந்த ஏப்ரல் மாதம் இந்த வழக்கு விசாரணையின் போது விசாரித்த நீதிபதி நாராயணன், வழக்கினை இன்று ஜூன்-23 ஆம் தேதி ஒத்திவைத்து உத்தரவிட்டார், அதன்படி இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வருகிறது.