டெல்டா மாவட்டங்களில் இன்று லேசான மழை., மீனவர்களுக்கு எச்சரிக்கை..!

காவிரி டெல்டா மாவட்டங்கள், தென் கடலோர மாவட்டங்கள், காரைகாலில் இன்று லேசான மழைக்கு வாய்ப்புள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
நாளை தென் மாவட்டங்கள் , கடலோர மாவட்டங்கள், சேலம், நாமக்கல் மற்றும் ஈரோட்டில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது. புதுச்சேரி மற்றும் காரைக்காலில் ஓரிரு இடங்களில் மிதமான மழை பெய்யக்கூடும் எனவும் ஜனவரி 13-ஆம் தேதி தமிழ்நாட்டின் உள்மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
ஜனவரி 14,15-ல் கடலோர மாவட்டங்கள், உள் மாவட்டங்கள் புதுச்சேரி , காரைக்காலில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது. இன்று தென்மேற்கு வங்ககடல் , அதை ஒட்டிய பகுதிகளில் 3 கீ.மீ உயரத்திற்கு வளிமண்டல மேலடுக்கு சுழற்சியால் இடி , மழையுடன் பலத்த சூறாவளி வீச வாய்ப்புள்ளது. மணிக்கு 35 கீ.மீ முதல் 45 கீ.மீ வேகத்தில் பலத்த சூறாவளி வீச வாய்ப்புள்ளதால் மீனவர்களுக்கு இன்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
லேட்டஸ்ட் செய்திகள்
இஸ்ரேலில் குடியிருப்புகளில் குண்டு மழை பொழியும் ஈரான்.! கிளஸ்டர் குண்டுகள் என்ன செய்யும்.?
June 20, 2025
தனுஷின் ‘குபேரா’ எப்படி இருக்கு.? நெட்டிசன்கள் என்ன சொல்கிறார்கள்.! இதோ டிவிட்டர் விமர்சனம்.!
June 20, 2025
”பட்டாசு விபத்தில் பலியானவர்களுக்கு ரூ.10 லட்சம் வழங்க வேண்டும்” – மதுரை கிளை உத்தரவு.!
June 20, 2025