தமிழகத்தில் மீண்டும் ஊரடங்கா? தலைமை செயலாளர் ஆலோசனை!

As the spread of corona in Tamil Nadu begins to increase again, Chief Secretary will hold consultations with Health Secretary Radhakrishnan.

தமிழகத்தில் கொரோனா பரவல் மீண்டும் அதிகரிக்க தொடங்கிய நிலையில், சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணனுடன் தலைமை செயலாளர் ராஜீவ் ரஞ்சன் ஆலோசனை நடத்தவுள்ளார்.

தமிழகத்தில் கொரோனா பரவல் தற்பொழுது மீண்டும் விஸ்வரூபம் எடுத்து வருகிறது. குறிப்பாக, நான் ஒன்றுக்கு 3,500-க்கும் மேற்பட்டோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு வரும் நிலையில், கொரோனா பரவலை கட்டுப்படுத்த தமிழக அரசு பலரு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.எ அந்தவகையில், தடுப்பூசி போடும் பணிகள் தீவிரமாக நடைபெறுகிறது.

கொரோனாக்கு எதிராக தடுப்பூசி போடப்பட்டு வரும் நிலையில், கொரோனா பரவல் அதிகரிப்பது மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்துகிறது. இதன்காரணமாக தலைமை செயலாளர் ராஜீவ் ரஞ்சன் கொரோனா கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் குறித்து சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணனுடன் இன்று பிற்பகல் ஆலோசனை மேற்கொள்ள உள்ளார். இந்த கூட்டத்தில் சுகாதாரத்துறை அதிகாரிகளும் கலந்துகொள்ளவுள்ளனர்.

இந்த கூட்டத்தில் தமிழகத்தில் கொரோனா பரவல் குறித்தும், தடுப்பூசி போடும் பணிகள் குறித்தும் பேசப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதுமட்டுமின்றி, கூட்டத்தின் முடிவில் கட்டுப்பாடுகள் குறித்தும், மீண்டும் ஊரடங்கு விதிக்கப்படுமா? என்பது குறித்து தெரியவரும்.