அதிமுக ஆட்சி குறித்து அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் விமர்சித்துள்ளது தொண்டர்கள் மத்தியில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
திண்டுக்கல்லில் அ.தி.மு.க சார்பில் மொழிப்போர் தியாகிகள் வீரவணக்க நாள் பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டு பேசிய அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன், தமிழகத்தில் நடைபெற்று வரும் ஆட்சியை கடுமையாக விமர்சித்து பேசினார். இதனால் கூட்டத்தில் சலசப்பு ஏற்பட்டது. அமைச்சர் பேசியதாவது, பொங்கல் பரிசாக ரூ.2,500 வழங்கக்கூடாது என்று திமுக தலைவர் முக ஸ்டாலின் நீதிமன்றத்தில் தடை உத்தரவு கேட்டனர்.
ஆனால், நீதியரசர்கள் அரசின் கொள்கை முடிவில் நீதிமன்றம் தலையிட முடியாது எண்டு கூறியதால், நாமெல்லாம் மகிழ்ச்சியாக பொங்கல் பரிசு ரூ.2500ஐ பெற முடிந்தது. மக்களுக்கு வழங்குவதை கெடுப்பீர்கள், ஆனால் வாழ்த்த மாட்டிங்க. ஆனால் நீங்கள் சொன்னதை எல்லாம் நாங்கள் கொடுத்தாச்சு என்றால் கேட்பையில் நெய் வடிக்கிறது என்றால் கேட்பாருக்கு எங்க போச்சு அறிவு என்று தான் சொல்வார்கள்.
தயவு செய்து இந்த ஆட்சி எவ்வளவு கேவலமாக இருக்கிறது என்று பாருங்கள். எவ்வளவு அசிங்கமாக போய்க்கிட்டு இருக்கிறது என்று சிந்தியுங்கள் என்று பொதுமேடையில் என்ன பேசுவது என்று தெரியாமல் உளறிவிட்டார். அமைச்சர் பேசியது அதிமுக தொண்டர்கள் மத்தியில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
செங்கல்பட்டு : 2026-ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் சூழலில் பாமகவில் ஏற்பட்டுள்ள உட்கட்சி விவகாரம் அரசியல் வட்டாரத்தில் தீயை…
சென்னை : நேற்று விழுப்புரம் தைலாபுரத்தில் செய்தியாளர்களை சந்தித்த பா.ம.க. நிறுவனர் ராமதாஸ், அன்புமணி குறித்து கடுமையான விமர்சனங்களை முன்வைத்தார்.“50 ஆண்டுகளாக…
மும்பை : பொதுவாகவே குஜராத் அணியின் வேகப்பந்துவீச்சாளர் முகமது சிராஜ் ஒரு விக்கெட் எடுத்துவிட்டார் என்றால் அந்த விக்கெட் எடுத்த குஷியை…
சென்னை : தக்லைஃப் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் பேசிய கமல்ஹாசன் உயிரே, உறவே, தமிழே’ என தொடங்கியவர் கன்னட மொழி…
சென்னை : பாட்டாளி மக்கள் கட்சியின் (பாமக) தலைவர் அன்புமணி ராமதாஸ், தனது தந்தையும் கட்சியின் நிறுவனருமான டாக்டர் ராமதாஸ் முன்வைத்த…
சென்னை : பாமக உட்கட்சி விவகாரம் என்பது அரசியல் வட்டாரத்தில் பேசுபொருளாக வெடித்துள்ளது. அதற்கு காரணம் பாமக நிறுவனர் "தவறான ஆட்டத்தை…