மதன் 24 மணி நேரத்தில், 20 மணி நேரம் யூடியூபில் வேலை பார்க்கிறார் என மதன் மனவிவி கிருத்திகா தெரிவித்துள்ளார்.
ஆபாச பேச்சு, பண மோசடி உள்ளிட்ட புகார்களில் கைதாகி சிறையில் உள்ள மதன் மீது குண்டர் பாய்ந்தது. இதனையடுத்து, பப்ஜி மதனின் மனைவி கிருத்திகா செய்தியாளர்களுக்கு பேட்டியளித்துள்ளார். அப்போது பேசிய அவர், கடந்த 10 வருடங்களாக நாங்கள் எந்த சொத்துக்களும் வாங்கவில்லை. நாங்கள் சொகுசு கார்கள் வைத்திருப்பதாக கூறப்படுகிறது. அப்படிப்பட்ட கார் இதுவரை வாங்கவில்லை. அது எங்களுடைய பெயரில் இல்லை. அவர் வைத்திருப்பது ஒரே ஒரு கார் தான், அது ‘ஆடி ஏ6’. அதுவும் நாங்கள் உழைத்து வாங்கியது தான்.
நாங்கள் இருக்கிறது வாடகை வீடு. அது சொந்த வீடு கூட கிடையாது. மதன் 24 மணி நேரத்தில், 20 மணி நேரம் யூடியூபில் வேலை பார்க்கிறார். 4 மணி நேரம் மட்டுமே ஓய்வெடுக்கிறார். வியூவர்ஸ் மூலமாக தான் வருமானம் வருகிறது. மற்ற எந்த வழிகளிலும் எங்களுக்கு வருமானம் வரவில்லை. மதனின் யுடியூப் சேனலை தடை செய்து விட்டனர். என்னுடைய வங்கி கணக்கு தொடர்பான சான்றுகள் மற்றும் டெபிட் கார்ட் போன்றவை போலீசில் தான் உள்ளது. இதனால் எங்களது வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது.
எனக்கு 8 மாத கைக்குழந்தை உள்ளது. விசாரணைக்கு அழைத்த போது, எனது 8 மாத கைக்குழந்தையோடு தான் சென்றேன். அவர்கள் நான் சொன்னதை கேட்டார்களா என்று எனக்கு தெரியவில்லை. ஆனால், நான் அவருடன் பப்ஜி விளையாடியதற்கான எந்த சான்றும் இல்லை. என்னுடைய வங்கி கணக்கை மட்டும் தான் அவர் பயன்படுத்தினார். இதற்காக மட்டும் தான் என்னை கைது செய்தனர் எனக் கூறியுள்ளார்.
மேலும், நான் இதுவரை பாப்ஜி விளையாடியதில்லை. என்னுடைய குரல் அவருடைய வீடியோவில் வந்ததில்லை. எங்கள் மீது 200 குற்றசாட்டுகள் இருப்பதாக கூறியுள்ளனர். அதற்கான சான்றுகளை எங்களுக்கு காண்பித்தால் நன்றாயிருக்கும். தற்போது அவர் மீது குண்டாஸ் போட்டுள்ளனர். ஆனால், அவர் மீது சரியான ஒரு கேஸ் இல்லாமல் எப்படி குண்டாஸ் போட்டார்கள் என்று தெரியவில்லை. பண மோசடி செய்ததாக கூறுகின்றனர். ஆனால் இதற்கான சான்றுகளும் எதுவும் கிடைக்கவில்லை. எனவே நாங்கள் இந்த பிரச்சனையை சட்ட ரீதியாக எதிர்கொள்வோம் என்று கிருத்திகா தெரிவித்துள்ளார்.
கொல்கத்தா : இன்று ஐபிஎல் 2025 இன் 57வது போட்டி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ்…
சென்னை : இந்தியா முழுவதும் நடந்த பாதுகாப்பு ஒத்திகையில் ஒரு பகுதியாக மே 7-ம் தேதியான இன்று சென்னை மற்றும்…
கொல்கத்தா : இன்று ஐபிஎல் 2025 இன் 57வது போட்டி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ்…
மும்பை : ஐபிஎல் சீசன் விறுவிறுப்பாக சென்றுகொண்டிருக்கும் வேளையில், இந்திய டெஸ்ட் அணியின் கேப்டன் ரோகித் சர்மா ஓய்வு பெறுவதாக…
டெல்லி : பஹல்காம் தாக்குதலுக்குப் பதிலடி கொடுக்கும் வகையில் இந்தியா ராணுவம் வெற்றிகரமாக தீவிரவாதிகள் முகாம்களை அழித்துள்ளதாக பாதுகாப்புத்துறை அமைச்சர்…
கொல்கத்தா : ஐபிஎல் 2025-இன் 57-வது போட்டியில், நடப்பு சீசனில் லீக் சுற்றுடன் நடையை கட்டவுள்ள சென்னை மற்றும் பிளே…