[FILE IMAGE]
கோடநாடு கொலை கொள்ளை வழக்கில், கனகராஜின் சகோதரர் தனபாலுக்கு எதிராக தொடர்ந்த வழக்கில், நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகி சாட்சியம் அளிக்க அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு விலக்கு அளித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கோடநாடு வழக்கில் கனகராஜின் சகோதரர் தனபாலுக்கு எதிராக எடப்பாடி பழனிசாமி தொடர்ந்த வழக்கில் நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகி சாட்சியம் அளிக்க விலக்கு அளிக்கப்பட்டது. நீதிமன்றத்தில் ஆஜராகி நேரில் சாட்சியம் அளிக்க இயலாததால் வீட்டில் சாட்சியம் பதிவு செய்ய வழக்கறிஞர் ஆணையரை நியமிக்க கோரியும் தாக்கல் செய்திருந்த மனுவில் தெரிவித்திருந்தார்.
பெரும் புயல் பாதிப்பு தவிர்க்கப்பட்டுள்ளது… தமிழக அரசுக்கு மத்திய ஆய்வு குழு பாராட்டு.!
இதுபோன்று, கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில் தன்னை தொடர்புபடுத்தி பேச தனபாலுக்கு தடை விதிக்கக்கோரியும், ரூ.1.10 கோடி மானநஷ்ட ஈடு கோரியும் மனு தாக்கல் செய்திருந்தார் எடப்பாடி பழனிசாமி. இதனால் கோடநாடு வழக்கில் எடப்பாடி பழநிசாமியை தொடர்புபடுத்தி பேச தனபாலுக்கு சமீபத்தில் இடைக்கால தடையும் விதிக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில், நேரில் சாட்சியம் அளிக்க விலக்கு அளித்த நிலையில், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியிடம் சாட்சியம் பதிவு செய்ய வழக்கறிஞர் ஆணையர் கார்த்திகைபாலன் நியமனம் செய்யப்பட்டார். மேலும், சாட்சியப் பதிவை ஒரு மாதத்தில் வழக்கறிஞர் ஆணையர் முடிக்க வேண்டும் என்றும் வழக்கை மாஸ்டர் நீதிமன்றத்துக்கு மாற்றம் செய்தும் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.
ஜம்மு காஷ்மீர் : இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் அதிகரித்து வரும் பதட்டங்களைக் கருத்தில் கொண்டு, இந்திய எல்லையோரம் உள்ள மாநில…
ராஜஸ்தான் : இந்தியாயை குறிவைத்து பாகிஸ்தான் ஏவிய ட்ரோன்களை இந்தியா சுட்டு வீழ்த்தியுள்ளது. ஜம்மு காஷ்மீர், பஞ்சாப், ராஜஸ்தான் மாநிலங்களில்…
லாகூர் : இந்தியா மீது தாக்குதல் தொடுத்த பாகிஸ்தானின் 3 போர் விமானங்கள் வான்பாதுகாப்பு அமைப்பால் சுட்டு வீழ்த்தப்பட்டது. இதில்…
தர்மசாலா : இன்று ஐபிஎல் 2025 இன் 58-வது போட்டி பஞ்சாப் கிங்ஸ் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகளுக்கு இடையே…
பஞ்சாப் : ஜம்முவில் தற்போது பாகிஸ்தான் டிரோன் தாக்குதல் நடத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அந்த தகவலின்படி, ஜம்மு விமானப்படை தளமான…
டெல்லி : ஆபரேஷன் சிந்தூர் குறித்த நேற்றைய தினம் செய்தியாளர்கள் மத்தியில் விளக்கமளித்த இந்திய ஆயுதப் படைகளின் இரண்டு பெண்…