கள்ளழகர் ஆற்றில் இறங்கும் நிகழ்வுக்கு அனுமதி மறுப்பு – உயர்நீதிமன்ற மதுரை கிளை

The Madurai branch of the High Court has said that permission cannot be granted for the Alhagar river landing ceremony in Madurai.

மதுரையில் அழகர் ஆற்றில் இறங்கும் விழாவிற்கு அனுமதி வழங்க இயலாது என உயர்நீதிமன்ற மதுரை கிளை தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வரும் நிலையில், இதனை கட்டுப்படுத்த அரசு பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.  இதனையடுத்து, பல புதிய கட்டுப்பாடுகளை தமிழக அரசு அமல்படுத்தியுள்ளது. மேலும், மக்களை கொரோனா விதிமுறைகளை கையாளுமாறும், தடுப்பூசி போட்டுக் கொள்ளுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில், மதம் சார்ந்த திருவிழாக்களுக்கு அரசு தடை விதித்துள்ள நிலையில், அழகர் திருவிழா நடத்தக்கோரிய அருண் போத்திராஜ் வழக்கை தள்ளுபடி செய்த நீதிமன்றம், மதுரையில் அழகர் ஆற்றில் இறங்கும் விழாவிற்கு அனுமதி வழங்க இயலாது என உயர்நீதிமன்ற மதுரை கிளை தெரிவித்துள்ளது. மேலும், கொரோனா மிக தீவிரமாக பரவி வரும் சூழலில் இந்த நிகழ்வை நடத்துவது எவ்வாறு சத்தியம் சாத்தியம் என நீதிபதிகள் கேள்வி எழுப்பியுள்ளனர்.