மகளிர் உரிமைத் தொகை முகாம் – தொடங்கி வைத்தார் முதலமைச்சர்!

செப்டம்பர் 15-ஆம் தேதி உரிமைத் தொகை வழங்கும் திட்டம் தொடங்கப்பட உள்ள நிலையில் விண்ணப்பதிவு முகாமை தொடங்கி வைத்தார் முதல்வர்.
கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்திற்கான விண்ணப்பதிவு முகாமை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தொடங்கி வைத்தார். தருமபுரி மாவட்டம் தொப்பூரில் விண்ணப்பதிவு முகாமினை முதல்வர் தொடங்கி வைத்தார். தமிழ்நாடு முழுவதும் 36,000 இடங்களில் சிறப்பு முகாம்களுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் குடும்ப தலைவிகளுக்கு மாதந்தோறும் ரூ.1000 வழங்கும் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டம் செப்டம்பர் 15-ஆம் தேதி தொடங்கி வைக்கவுள்ள நிலையில், இதற்கான விண்ணப்பதிவு முகாம் இன்று தொடங்கப்பட்டுள்ளது.
மகளிர் உரிமைத் தொகை திட்டத்திற்கான விண்ணப்பங்கள், டோக்கன்கள் ஏற்கனவே பயணிகளுக்கு வழங்கப்பட்டுள்ளன. அந்த டோக்கனில் குறிப்பிட்டுள்ள நாள், நேரத்தில் குடும்ப தலைவிகள் முகாமில் விண்ணப்பிக்க வேண்டும்.
முன்னாள் முதல்வர் கருணாநிதியால் மகளிர் சுய உதவி குழுக்கள் திட்டம் 1989ல் தருமபுரியில் தொடங்கப்பட்டது. இந்த நிலையில், சுய உதவி குழுக்கள் தொடங்கப்பட்ட தருமபுரியில் உரிமைத் தொகை திட்டத்திற்கான விண்ணப்பதிவு முகாமை முதலமைச்சர் முக ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்தார்.