மீண்டும் மஞ்சப்பை எக்ஸ்பிரஸ்.. சென்னையில் குத்துசண்டை அகாடமி – அமைச்சர் அறிவிப்பு

Published by
பாலா கலியமூர்த்தி

தமிழகத்தில் மாவட்ட அளவில் காலநிலை மாற்ற இயக்கம் ஏற்படுத்தப்படும் என பேரவையில் அமைச்சர் அறிவிப்பு.

தமிழ்நாடு சட்டப்பேரவையில் வனம், சுற்றுச்சூழல், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை மானிய கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்று வருகிறது. அப்போது பேசிய அமைச்சர் மெய்யநாதன், சென்னையில் ரூ.2 கோடி செலவில் குத்துசண்டை அகாடமி அமைக்கப்படும். பசுமை இயக்கத்தை நடைமுறைப்படுத்த 25,000 பசுமை பள்ளிகள் தேர்ந்தெடுக்கப்படும். மீண்டும் மஞ்சப்பை எக்ஸ்பிரஸ் ரயில் கண்காட்சி என்ற திட்டம் தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரிய நிதியிலிருந்து ரூ.13 கோடி செலவில் செயல்படுத்தப்படும் என அறிவித்தார்.

மேலும், தமிழகத்தில் மாவட்ட அளவில் காலநிலை மாற்ற இயக்கம் ஏற்படுத்தப்படும். கோயம்பேடு சந்தை வளாகம் கரிம மாசு இல்லாத வளாகமாக உருவாக்கப்படும் என்றும் நெகிழி இல்லா வளாகங்களை உருவாக்கும் பள்ளி, கல்லூரி, வணிக நிறுவனங்களுக்கு மஞ்சப்பை விருது வழங்கப்படும் எனவும் தெரிவித்தார். இதன்பின் பேசிய அமைச்சர், புதுக்கோட்டை, திருவாரூர், நாகை, வேலூரில் விளையாட்டு மைதானங்களுக்கு கலைஞர் கருணாநிதி பெயர் சூட்டப்படும் என்றும் நடப்பாண்டு சுற்றுசூழல்துறை சார்பில் 1,000 மரங்கள் அடங்கிய குறுங்காடுகள் உருவாக்கப்படும் எனவும் கூறியுள்ளார்.

Published by
பாலா கலியமூர்த்தி

Recent Posts

ஆர்எஸ்எஸ் நிகழ்ச்சியில் பங்கேற்கவில்லை…எஸ்.பி.வேலுமணி விளக்கம்!

ஆர்எஸ்எஸ் நிகழ்ச்சியில் பங்கேற்கவில்லை…எஸ்.பி.வேலுமணி விளக்கம்!

சென்னை : மாவட்டத்தில் ஜூன் 22 – ஆம் தேதி அன்று இந்து முன்னணி ஏற்பாட்டில் நடைபெற்ற முருக பக்தர்கள் மாநாட்டில்,…

5 minutes ago

மும்பை வேண்டாம் வேறு மாநிலத்துக்கு விளையாடப்போறேன்! அனுமதி கேட்கும் பிரித்வி ஷா!

மும்பை : இந்திய கிரிக்கெட் வீரர் பிரித்வி ஷா, தனது கிரிக்கெட் வாழ்க்கையை மீண்டும் புதுப்பிக்கும் முயற்சியாக, மும்பை கிரிக்கெட்…

40 minutes ago

போதைப்பொருள் வழக்கு : நடிகர் ஸ்ரீகாந்த் அதிரடி கைது!

சென்னை :  நடிகர் ஸ்ரீகாந்த் போதைப்பொருள் பயன்படுத்திய குற்றச்சாட்டில் சென்னை போதைப்பொருள் தடுப்பு நுண்ணறிவு பிரிவு (NCB) காவல்துறையினரால் கைது…

60 minutes ago

“உடம்பில் ஓடுவது அதிமுக ரத்தமா? பாஜக பாசமா?” – ஆர்.எஸ்.பாரதி காட்டம்!

சென்னை :  மாவட்டத்தில் ஜூன் 22 - ஆம் தேதி அன்று இந்து முன்னணி ஏற்பாட்டில் நடைபெற்ற முருக பக்தர்கள் மாநாட்டில்,…

1 hour ago

“போரை தொடங்கிடீங்க..ஆனா நாங்க தான் முடிப்போம்”…அமெரிக்காவுக்கு ஈரான் கடும் எச்சரிக்கை!

தெஹ்ரான் : இஸ்ரேல் மற்றும் ஈரான் இரண்டிற்கும் இடையே கடுமையான போர் நடைபெற்று வருகிறது. 11-வது நாளாக நீடித்து வரும்…

1 hour ago

ஸ்ரீ காந்த் விவகாரம் : “40 முறை போதைப்பொருள் விற்றேன்”..பிரதீப் கொடுத்த பகீர் வாக்குமூலம்!

சென்னை : தமிழ் திரையுலகின் முன்னணி நடிகர் ஸ்ரீகாந்த் மீது போதைப்பொருள் பயன்படுத்தியதாக எழுந்த குற்றச்சாட்டு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.…

2 hours ago