எஸ்பிபி உடலுக்கு அமைச்சர் ஜெயக்குமார் நேரில் அஞ்சலி

Default Image

எஸ்.பி. பாலசுப்பிரமணியத்தின் உடலுக்கு அமைச்சர் ஜெயக்குமார்  நேரில் அஞ்சலி செலுத்தினார். 

கொரோனாவால் பாதிக்கப்பட்ட எஸ்.பி.பி. சுப்பிரமணியம் கடந்த 50 நாட்களுக்கு மேலாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார் .கொரோனாவில் இருந்து மீண்டபோதும், பிற உடல் உறுப்புகள் ஒத்துழைக்காத நிலையில், இன்று பிற்பகல் 1.04 மணிக்கு  அவர் காலமானார். அவரது மறைவு திரையுலகினரிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அவருக்கு பிரதமர் உள்ளிட்ட பல அரசியல் தலைவர்கள், கிரிக்கெட் வீரர்கள் என பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

மறைந்த எஸ்.பி.பாலசுப்ரமணியம் உடல் மருத்துவமனையில் இருந்து நுங்கப்பாக்கத்தில் உள்ள அவரது வீட்டிற்கு எடுத்து செல்லப்பட்டு, பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. சினிமா பிரபலங்கள் உட்பட பலரும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். இந்நிலையில்  மறைந்த பாடகர் எஸ்.பி. பாலசுப்பிரமணியத்தின் உடலுக்கு அமைச்சர் ஜெயக்குமார் நேரில் அஞ்சலி செலுத்தினார். 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

Today Live 08052025
Central government orders OTT platforms
Pakistan issues security alert
S-400
Union minister Jaishankar
Union minister Rajnath singh say about Operation Sindoor