புதுச்சேரியில் சைக்கிளில் ஆய்வு பணிகளை மேற்கொண்ட சுகாதார அமைச்சர்

புதுச்சேரி நகர பகுதிகளில் சைக்கிளில் களஆய்வு பணிகளை மேற்கொண்டார் சுகாதார அமைச்சர்.
கொரோனா வைரஸ் சீனாவில் தொடங்கி தற்போது உலகம் முழுவதும் பரவி உளள்து .இந்த வைரஸ் இந்தியாவிலும் பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது.இதனை தொடர்ந்து இதற்கான தடுப்பு நடவடிக்கையாக இந்தியா முழுவதும் 21 நாளைக்கு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
புதுச்சேரியிலும் இந்த ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ள நிலையில் கொரோனா வைரஸ் பாதிப்பை கட்டுப்படுத்த அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதனால் அம்மாநில சுகாதாரத்துறை அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ் நகர் முழுவதும் சைக்கிளில் சென்று ஆய்வு மேற்கொண்டார்.